Show all

பாஜக பேரறிமுகர் கல்யாணராமன் மீண்டும் கைது! ஒன்றியக் குற்றப்பிரிவு காவல்துறையினரால் நேற்று நள்ளிரவில்

ஒன்பது மாதங்களுக்கு முன்பு மதவாத பொல்லாங்கு பேசியமைக்காக கைதாகி விடுவிக்கப்பட்ட பாஜக பேரறிமுகர் கல்யாணராமன், மீண்டும் நேற்று நள்ளிரவில் கைது செய்யப்பட்டுள்ளார் கீச்சுவில் வெளியிட்ட பொல்லாங்குப் பதிவுக்காக

31,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5123: பாஜக பேரறிமுகரான கல்யானராமன் சமூக வலைதளமான கீச்சுவில் தொடர்ந்து ஆபாசமான சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவு செய்து வரும் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாட்டின் பல்வேறு அரசியல் தலைவர்கள் குறித்து பொல்லாங்காக கருத்து தெரிவித்த புகாரின் அடிப்படையில் பாஜக பேரறிமுகர் கல்யாணராமன் நள்ளிரவில் ஒன்றியக் குற்றப்பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

திமுகவின் தர்மபுரி பாராளுமன்ற உறுப்பினர் செந்தில் குமாரின் உதவியாளர் சந்தோஷ் அளித்த புகாரின் அடிப்படையில் பாஜக பேரறிமுகர் கல்யாணராமன் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அந்த புகாரின் அடிப்படையில் புகார் அளிக்கப்பட்ட 10 மணிநேரத்தில் கல்யாணராமனை ஒன்றியக் குற்றப்பிரிவு காவல்துறையினர் நள்ளிரவில் கைது செய்துள்ளனர். சென்னை வளசரவாக்கம் தேவி குப்பம் அன்பு நகர் பகுதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் வைத்து கைது செய்த ஒன்றியக் குற்றப்பிரிவு காவல்துறையினர் கமுக்க இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒன்பது மாதங்களுக்கு முன்பு கோவையில் நடைபெற்ற பாஜக பொதுகூட்டத்தில் நபிகள் நாயகம் பற்றி பொல்லாங்காகப் பேசி சர்ச்சையை ஏற்படுத்திய புகாரில் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,039.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.