Show all

தமிழ்நாடு அணி, வாகை சூடிட வாழ்த்துக்கள்! நாளைய முஷ்டாக் அலி துடுப்பாட்ட இறுதிப்போட்டியில்

சையத் முஷ்டாக் அலி துடுப்பாட்டத்தில், நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் தமிழ்நாடு - கர்நாடகா மோதுகின்றன.

05,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான அரையிறுதி ஆட்டத்தில்  தமிழ்நாடு - ஹைதராபாத் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் தமிழ்நாடு அணி 8 இலக்கு வேறுபாட்டில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியால் தமிழ்நாடு அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. 

மற்றொரு அரையிறுதி போட்டியில் கர்நாடகா -விதர்பா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் கர்நாடகா அணி 4 ஓட்டங்கள் வேறுபாட்டில்  வெற்றி பெற்றது. இதனால் கர்நாடகா அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

தமிழ்நாடு - கர்நாடகா அணிகள் மோதும்  இறுதிப்போட்டி நாளை  டெல்லியில் நடைபெறும்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இறுதி போட்டியில் தமிழக அணியை ஒற்றை ஓட்ட வேறுபாட்டில் வீழ்த்தி கர்நாடகா அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பிற்றியது .

இதனால் இந்தத் தோல்விக்கு பதிலடி கொடுத்து கோப்பையை வெல்லும் முனைப்பில் தமிழ்நாடு அணி உள்ளது. தமிழ்நாடு அணி, வாகை சூடிட நமது வாழ்த்துக்கள்!
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,074.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.