Show all

மெஸ்ஸியின் சாதனையைச் சமன்செய்த இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி

நான்கு அணிகள் பங்கேற்கும் கண்டங்களுக்கு இடையிலான சர்வதேச கால்பந்து தொடரின் இறுதிப்போட்டி நேற்று மும்பையில் நடைபெற்றது. இதில் முதல் 2 இடங்களை பிடித்த இந்தியா மற்றும் கென்யா அணிகள் பலப்பரீச்சை நடத்தின. ஆட்டம் தொடங்கிய 8-வது நிமிடத்திலும் 29-வது நிமிடத்திலும்  இரண்டு கோல்களை இந்திய வீரர் சுனில் சேத்ரி அடித்தார். இதை தொடர்ந்து இறுதி வரை கோல் எதுவும் அடிக்கப்படாததால், 2-0 என்ற கோல் கணக்கில் இந்திய அணி கென்யாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.

இந்த போட்டியில் இரண்டு கோல்கள் அடித்ததன் மூலம் இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி சர்வதேச போட்டியில் அதிக கோல்கள் அடித்த வீரர்கள் (தற்போது விளையாடி கொண்டிருக்கும்) பட்டியலில் 64 கோல்கள் அடித்து லயோனல் மெஸ்ஸியின் சாதனையைச் சமன்செய்துள்ளார். இந்த பட்டியலில் போர்ச்சுக்கலை சேர்ந்த ரொனால்டோ 81 கோல்கள் அடித்து  முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.