Show all

இரண்டாவது T20 போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தியது இந்தியா

இலங்கையின் 70 வது ஆண்டு சுதந்திர தின விழாவை ஒட்டி இலங்கை, வங்கதேசம் மற்றும் இந்தியா பங்குபெறும் நிதாஹாஸ் டி20 முத்தரப்பு தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இலங்கைக்கு எதிரான முதல் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்த நிலையில் இந்தியா - வங்கதேசம் அணிகள் மோதும் இரண்டாவது T20 போட்டி கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நேற்று நடைபெற்றது. 

இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா, ஃபீல்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய வங்கதேச அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் குவித்தது. இந்திய அணி தரப்பில் உனத்கட் 3 விக்கெட்டுகளும், விஜய் சங்கர் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.  

அதை தொடர்ந்து 140 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, 18.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 140 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்திய அணியில் அதிகபட்சமாக தவான் 55 ரங்களையும், ரெய்னா மற்றும் பாண்டே முறையே 28 மற்றும் 27 ரன்களை குவித்தனர்.  வங்காளதேசம் சார்பில் ருபேல் உசேன் 2 விக்கெட்டும், முஸ்தபிசுர் ரகுமான், தஸ்கின் அகமது ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.