இலங்கையின் 70 வது ஆண்டு சுதந்திர தின விழாவை ஒட்டி இலங்கை, வங்கதேசம் மற்றும் இந்தியா பங்குபெறும் நிதாஹாஸ் டி20 முத்தரப்பு தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இலங்கைக்கு எதிரான முதல் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்த நிலையில் இந்தியா - வங்கதேசம் அணிகள் மோதும் இரண்டாவது T20 போட்டி கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா, ஃபீல்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய வங்கதேச அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் குவித்தது. இந்திய அணி தரப்பில் உனத்கட் 3 விக்கெட்டுகளும், விஜய் சங்கர் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். அதை தொடர்ந்து 140 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, 18.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 140 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்திய அணியில் அதிகபட்சமாக தவான் 55 ரங்களையும், ரெய்னா மற்றும் பாண்டே முறையே 28 மற்றும் 27 ரன்களை குவித்தனர். வங்காளதேசம் சார்பில் ருபேல் உசேன் 2 விக்கெட்டும், முஸ்தபிசுர் ரகுமான், தஸ்கின் அகமது ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.