Show all

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர் கேப்டன் யார்?

பெங்களூரில் தென் ஆப்பிரிக்கா தொடர்கான பயிற்சியில் இந்திய வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் மற்றும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணி இன்று  அறிவிக்கப்படுகிறது.

தேர்வுகுழுவில் தலைவர் சந்தீப் பட்டீல் தலைமையிலான தேர்வு குழு பெங்களூரில் நாளை கூடி வீரர்களை தேர்வு செய்கிறார்கள். ஒருநாள் போட்டிக்கான அணியில் மாற்றம் செய்வதில் தேர்வு குழு ஆர்வத்துடன் இருக்கிறது.

தோனி தலைமையிலான இந்திய அணி கடந்த ஜூன் மாதம் வங்காளதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடரை இழந்துள்ளது. இதனால் தேர்வு குழ டோனியை 20 ஓவர் போட்டிக்கு மட்டும் கேப்டனாக நியமித்து, ஒருநாள் போட்டியில் அவருக்கு, பதிலாக வீராட் கோலியை கேப்டனாக நியமிக்கலாம் என்று தேர்வு குழு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. மேலும்,நாளை நடைபெறும் தேர்வு குழு கூட்டத்தில் டோனி பற்றி தீவிரமாக விவாதிக்கப்படும்.

டெஸ்ட் போட்டியில் விராட் கோலி – ரவிசாஸ்திரி கூட்டணி சிறப்பாக செயல்பட்டது.இதேபோல ஒருநாள் போட்டியிலும் சிறப்பாக செயல்படும் என்ற நம்பிக்கை தேர்வு குழுவினரிடம் இருக்கிறது. இதனால் தோனியை கழற்றி விடுவதில் தேர்வு குழுவினர் ஆர்வத்துடன் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.