Show all

மகளிர் உலக கோப்பை: 115 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது இந்தியா

ஐசிசி மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் தனது ஐந்தாவது ஆட்டத்தில் 115 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவிடம் படு தோல்வி அடைந்தது இந்திய அணி. இது இந்திய அணியின் இந்த தொடரின் முதல் தோல்வி ஆகும். 

டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 273 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக தொடக்க வீரர் லிசெல்லி லீ 92 ரன்கள் குவித்தார். இதையடுத்து 274 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 46 ஓவர்கள் முடிவில் 158 ரன்கள் மட்டுமே எடுத்து 115 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்திய அணியில் அதிகபட்சமாக தீப்தி சர்மா 60 ரன்களும், ஜூலன் கோஸ்வாமி 43 ரன்களும் குவித்தனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.