Show all

இந்திய வீராங்கனைகள் போட்டியில் இருந்து விலகல்!

உபேர் கோப்பை மகளிர் இரட்டையர் பிரிவில் விளையாடுவதாக இருந்த இந்திய வீராங்கனைகள் சிக்கி ரெட்டி, அஷ்வினி பொன்னப்பா ஆகியோர் போட்டியில் இருந்து விலகி உள்ளனர். 

 

10,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5124: சிக்கி ரெட்டிக்கு அடிவயிற்றில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக அவர் 4 முதல் 6 கிழமைகள் வரை ஓய்வெடுக்குமாறு மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார்.

 

பாங்காக்கில் அடுத்த மாதம் உபேர் கோப்பை சிறகுப்பந்தாட்டப் போட்டி நடைபெற உள்ளது. இப்போட்டியில் மகளிர் இரட்டையர் பிரிவில் விளையாடுவதாக இருந்த இந்திய வீராங்கனைகள் சிக்கி ரெட்டி, அஷ்வினி பொன்னப்பா ஆகியோர் போட்டியில் இருந்து விலகி உள்ளனர். 

 

சிக்கி ரெட்டிக்கு அடிவயிற்றில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக அவர் 4 முதல் 6 கிழமைகள் வரை ஓய்வெடுக்குமாறு மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார். இதனால் அவரின் இணைபோட்டியாளரான அஷ்வினி பொன்னப்பாவம் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் இந்தப் போட்டியில் இருந்து விலகி உள்ளதாக இந்தியச் சிறகுப்பந்து  சங்கம் தெரிவித்துள்ளது.

 

மேலும், வெளியேறிய வீராங்கனைகளுக்குப் மாற்றாக, சிம்ரன் சிங் மற்றும் ரித்திகா தக்கார் ஆகியோரை சேர்க்க தேர்வாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,227.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.