Show all

மாற்றி நிறுவுகிற ஒற்றை வேலையால், இந்தியா உண்மையான விடுதலை பெறமுடியும். செய்வீர்களா!

மாற்றி நிறுவுகிற ஒற்றை வேலையால், இந்தியா உண்மையான விடுதலை பெறமுடியும். செய்வீர்களா! என்று கேட்டு உருவாக்கப்பட்ட இந்த விண்ணப்பக் கவிதை- ஒன்றிய ஆட்சிக்கு முனையும் கட்சிகளின் பார்வைக்கும், இந்த விண்ணப்பத்தை உள்வாங்க வேண்டும் என்கிற வேண்டுகோகோளோடு மக்கள் பார்வைக்கும்

30,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5125. 
இன்று
எழுபத்தேழாவது விடுதலைநாள் 
இந்தியா கொண்டாட.
விடுதலை பெற்ற இந்தியாவில்,
இப்போது ஒரு விண்ணப்பம், 
ஒன்றியத்தை ஆள விரும்பும்
கட்சிகளிடம்.
கடந்த 76 ஆண்டுகளாக,
காலக்கெடு முடிந்த சட்டத்தில்,
ஹிந்தி ஆண்டுகொண்டு இருக்கிறது.
அந்த இடத்தில்
தமிழ் உள்ளிட்ட
22 மொழிகளை
ஒன்றிய ஆட்சி மொழிகளாக
அங்கீகரிக்கும்
அட்டவணை எட்டை
மாற்றி நிறுவுகிற ஒற்றை வேலையால்
இந்தியா உண்மையான விடுதலை பெறமுடியும்.
செய்வீர்களா!
செய்வீர்கள் என்றால்,
வெளிப்படையாக உறுதி கொடுங்கள்.
உறுதி கொடுக்கிற கட்சி கூட்டணி
வெற்றிபெற வாழ்த்தை உரித்தாக்குகிறோம்.
இந்த விண்ணப்பத்தை நாங்கள் 
பேரளவாக விளம்பரப்படுத்துகிறோம்.
பேரளவாக மக்கள் 
எங்கள் இந்தக் கருத்தை 
உறுதியாக உள்வாங்கியிருப்பார்கள்
ஆகவே 
நாங்கள் உரித்தாக்க விருக்கிற வாழ்த்தை
புறந்தள்ளாதவர்களுக்கு 
உறுதியாக உண்டு வெற்றி!
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,678.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.