20,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: முடியாட்சி என்றாலும் கூட, நமது சங்ககால மன்னராட்சி தற்போதைய மக்களாட்சி என்று சொல்லப் படுகிற ஆட்சியைக் காட்டிலும் மிகமிக உயரமானதாக அறிய முடிகிறது. அரசர்களின் அவைகளிலேயே புலவர்கள் என்கிற ஊடகவியலாளர்களுக்கு சங்க காலத்தில் இருக்கை வழங்கப் பட்டிருந்தது. அந்தப் புலவர்களை பட்டியல் இட முயன்றால் எண்ணிக்கை நீண்டு கொண்டே போகிறது. அத்தனை பேரும் மன்னர்களையும் மக்களையும் ஒருங்கிணைத்திருக்கிறார்கள் ; நல்லாட்சி நிகழ வழி வகுத்திருக்கிறார்கள். ஆனால் இன்றைக்கு இந்தியாவில் அரசியல் அரங்கில் கேள்விக்காக காத்திருக்கும் இதழ்களை ஒற்றைப் படையில் அடக்கி விடலாம். அந்த ஊடகங்களின் செய்தியாளர்களை இரட்டைப் படையில் அடக்கி விடலாம். இந்த நிலையில், தலைமை அமைச்சராகப் பதவியேற்று 1654 நாட்கள் ஆகியும் மோடி இதுவரை இதழியலாளர்களை சந்தித்ததில்லை என காங்கிரஸ் தலைவர் ராகுல் தெரிவித்துள்ளார். ராகுல் தனது கீச்சுப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மோடி அவர்களே, தற்போது கருத்துப் பரப்புதல் ஓய்ந்து விட்டது. இனியாவது உங்களின் பகுதி நேர வேலையான தலைமை அமைச்சர் பணியை செய்வீர்கள் என நம்புகிறேன். தலைமை அமைச்சராகப் பதவியேற்று 1654 நாட்கள் ஆகி விட்டது. ஆனால் இதுவரை இதழியலாளர்களைச் சந்தித்ததில்லையே? ஒருநாள் முயற்சித்து பார்த்தால் கேட்கப்படும் கேள்விகள் வேடிக்கையானதாக இருக்கும். இவ்வாறு குறிப்பட்டுள்ள ராகுல், அத்துடன் ஐதராபாத்தில் தான் செய்தியாளர்களை சந்தித்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சிலவற்றையும் பதிவிட்டுள்ளார். சங்க காலத்தில் செய்தியாளர்களாக சேர, சோழ, பாண்டிய நாடுகளில் மக்களையும் மன்னர்களையும் மாறி மாறி சந்தித்து வந்த புலவர்களின் சிறு பட்டியல்: ஓய்வாக இருக்கும் போது படிக்கலாம். அகம்பன் மாலாதனார். அஞ்சியத்தை மகள் நாகையார். அஞ்சில் அஞ்சியார். அஞ்சில் ஆந்தையார். அடைநெடுங் கல்வியார். அணிலாடு முன்றிலார். அண்டர் மகன் குறுவழுதியார். அதியன் விண்ணத்தனார். அந்தி இளங்கீரனார். அம்மூவனார். அம்மெய்யன் நாகனார் அரிசில் கிழார் அல்லங் கீரனார் அழிசி நச்சாத்தனார் அள்ளூர் நன்முல்லையார் அறிவுடை நம்பி ஆசிரியன் பெருங்கண்ணன் ஆடுதுறை மாசாத்தனார் ஆதிமந்தி ஆரிய அரசன் யாழ்ப் பிரம தத்தன் ஆர்க்காடு கிழார் மகனார் வெள்ளைக்கண் அத்தனார் ஆலங்குடி வங்கனார் ஆலத்தூர் கிழார் ஆலம்பேரி சாத்தனார் ஆலியார் ஆவூர் கிழார் ஆவூர்கிழார் மகனார் கண்ணனார் ஆவூர்க் காவிதிகள் சாதேவனார் ஆவூர் மூலங்கிழார் இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார் இடைக்காடனார் இடைக்குன்றூர் கிழார் இடையன் சேந்தன் கொற்றனார் இடையன் நெடுங்கீரனார் இம்மென் கீரனார் இரணியமுட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார் இருங்கோன் ஒல்லையாயன் செங்கண்ணனார் இருந்தையூர்க் கொற்றன் புலவன் இரும்பிடர்த் தலையார் இளங் கீரந்தையார் இளங் கீரனார் இள நாகனார் இளந் திரையன் இளந் தேவனார் இளம்புல்லூர்க் காவிதி இளம்பூதனார் இளம்பெருவழுதி இளம்போதியார் இளவெயினனார் இறங்குகுடிக் குன்றநாடன் இறையனார் இனிசந்த நாகனார் ஈழத்துப் பூதன்தேவனார் உகாய்க்குடி கிழார் உக்கிரப் பெருவழுதி உமட்டூர் கிழார் மகனார் பரங்கொற்றனார் உம்பற்காட்டு இளங்கண்ணனார் ஷ பாடல் 1 உருத்திரனார் உலோச்சனார் உவர்க்கண்ணூர்ப் புல்லங்கீரனார் உழுந்தினைம் புலவர் உறையனார் உறையூர் இளம்பொன் வாணிகனார் உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் உறையூர்க் கதுவாய்ச் சாத்தனார் உறையூர்ச் சல்லியங் குமரனார் உறையூர்ச் சிறுகந்தனார் உறையூர்ப் பல்காயனார் உறையூர் மருத்துவன் தாமோதரனார் உறையூர் முதுகண்ணன் சாத்தனார் ஊட்டியார் ஊண்பித்தை ஊன்பொதி பசுங்குடையார் எயிற்றியனார் எயினந்தையார் எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார் எருமை வெளியனார் எருமை வெளியனார் மகனார் கடலனார் எழூஉப்பன்றி நாகன் குமரனார் ஐயாதிச் சிறு வெண்டேரையார் ஐயூர் முடவனார் ஐயூர் மூலங்கிழார் ஒக்கூர் மாசாத்தனார் ஒக்கூர் மாசாத்தியார் ஒருசிறைப் பெரியனார் ஒரூஉத்தனார் ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் ஓதஞானி ஓதலாந்தையார் ஓரம்போகியார் ஓரிற்பிச்சையார் ஓரேர் உழவர் ஒளவையார் கங்குல் வெள்ளத்தார் கச்சிப்பேட்டு இளந்தச்சனார் கச்சிப்பேட்டுக் காஞ்சிக் கொற்றனார் கச்சிப்பேட்டுப் பெருந்தச்சனார் கடம்பனூர்ச் சாண்டிலியன் கடலூர்ப் பல்கண்ணனார் கடியலூர் உருத்திரங்கண்ணனார் கடுந்தொடைக் காவினார் கடுந்தோட் கரவீரன் கடுவன் இளமள்ளனார கடுவன் இளவெயினனார் கடுவன் மள்ளனார் கணக்காயன் தத்தனார் கணியன் பூங்குன்றனார் கண்ணகனார் கண்ணகாரன் கொற்றனார் கண்ணங் கொற்றனார் கண்ணம் புல்லனார் கண்ணனார் கதக் கண்ணனார் கதப் பிள்ளையார் கந்தரத்தனார் கபிலர் கயத்தூர் கிழார் கயமனார் கருங்குழல் ஆதனார் கரும்பிள்ளைப் பூதனார் கருவூர் கிழார் கருவூர்க் கண்ணம்பாளனார் கருவூர்க் கந்தப்பிள்ளைச் சாத்தனார் கருவூர்க் கலிங்கத்தார் கருவூர்க் கோசனார் கருவூர்ச் சேரமான் சாத்தன் கருவூர் நன்மார்பனார் கருவூர்ப் பவுத்திரனார் கருவூர்ப் பூதஞ்சாத்தனார் கருவூர்ப் பெருஞ்சதுக்கத்துப் பூத நாதனார் கல்பொரு சிறுநுரையார் கல்லாடனார் கவைமகன் கழாத்தலையார் கழார்க் கீரன் எயிற்றியனார் கழார்க் கீரன் எயிற்றியார் கழைதின் யானையார் கள்ளிக்குடிப் பூதம் புல்லனார் கள்ளில் ஆத்திரையனார் காக்கை பாடினிடியார் நச்சௌ;ளையார் காசிபன் கீரன் காட்டூர் கிழார் மகனார் கண்ணனார் காப்பியஞ் சேந்தனார் காப்பியாற்றுக் காப்பியனார் காமஞ்சேர் குளத்தார் காரி கிழார் காலெறி கடிகையார் காவட்டனார் காவற்பெண்டு காவல் முல்லைப் பூதனார் காவிரிப் பூம்பட்டினத்துக் கந்தரத்தனார் காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக் கண்ணனார் காவிரிப் பூம்பட்டினத்துச் செங்கண்ணனார் காவிரிப் பூம்பட்டினத்துச் சேந்தன் கண்ணனார் காவிரிப் பூம்பட்டினத்துப் பொன்வாணிகனார் மகனார் நப்பூதனார் கிடங்கில் காவிதிக் கீரங்கண்ணனார் கிடங்கில் காவிதிப் பெருங்கொற்றனார் கிடங்கில் குலபதி நக்கண்ணனார் - பாடல் 1 கிள்ளிமங்கலங் கிழார் கிள்ளிமங்கலங்கிழார் மகனார் சேரகோவனார் கீரங்கீரனார் கீரந்தையார் குடபுலவியனார் குடவாயிற் கீரத்தனார் குட்டுவன் கண்ணனார் குட்டுவன் கீரனார் குண்டுகட் பாலியாதனார் குதிரைத் தறியனார் குப்பைக் கோழியார் குமட்டூர்க் கண்ணனார் குமுழி ஞாழலார் நப்பசலையார் குழற்றத்தனார் குளம்பனார் குளம்பா தாயனார் குறமகள் இளவெயினி குறமகள் குறியெயினி குறியிறையார் குறுங்கீரனார் குறுங்குடி மருதனார் குறுங்கோழியூர் கிழார் குன்றம் பூதனார் குன்றியனார் குன்றூர் கிழார் மகனார் கூகைக் கோழியார் கூடலூர் கிழார் கூடலூர்ப் பல்கண்ணனார் கூவன்மைந்தன் கூற்றங் குமரனார் கேசவனார் கொடிமங்கலத்து வாதுளி நற்சேந்தனார் கொட்டம்பலவனார் கொல்லன் அழிசி கொல்லிக் கண்ணன் கொள்ளம்பக்கனார் கொற்றங் கொற்றனார் கோக்குளமுற்றனார் கோடை பாடிய பெரும்பூதனார் கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான் கோட்டியூர் நல்லந்தையார் கோண்மா நெடுங்கோட்டனார் கோப்பெருஞ்சோழன் கோவர்த்தனார் கோவூர் கிழார் கோவேங்கைப் பெருங்கதவனார் கோழிக் கொற்றனார் கோளியூர் கிழார் மகனார் செழியனார் கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார் சங்கவருணர் என்னும் நாகரியர் சத்திநாதனார் சல்லியங்குமரனார் சாகலாசனார் சாத்தந்தையார் சாத்தனார் சிறுமோலிகனார் சிறுவெண்டேரையார் சிறைக்குடி ஆந்தையார் சீத்தலைச் சாத்தனார் செங்கண்ணனார் செம்பியனார் செம்புலப்பெயல்நீரார் செயலூர் இளம்பொன் சாத்தன் கொற்றனார் செய்திவள்ளுவன் பெருஞ்சாத்தன் செல்லூர் கிழார் மகனார் பெரும்பூதங்கொற்றனார் செல்லூர்க் கோசிகன் கண்ணனார் சேந்தங் கண்ணனார் சேந்தம் பூதனார் சேந்தன் கீரனார் சேரமான் எந்தை சேரமான் இளங்குட்டுவன் சேரமான் கணைக்கால் இரும்பொறை சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை சோணாட்டு முகையலூர்ச் சிறுகருந்தும்பியார் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் சோழன் நலங்கிள்ளி சோழன் நல்லுருத்திரன் தங்கால் ஆத்திரேயன் செங்கண்ணனார் தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார் தனிமகனார் தாமப்பல் கண்ணனார் தாமோதரனார் தாயங்கண்ணனார் தாயங்கண்ணியார் திப்புத்தோளார் திருத்தாமனார் தீன்மதி நாகனார தும்பிசேர் கீரனார் துறைக்குறு மாவிற் பாலங்கொற்றனார் துறையூர் ஓடைகிழார் தூங்கலோரியார் தேய்புரிப் பழங்கயிற்றினார் தேரதரன் தேவகுலத்தார் தேவனார் தொடித்தலை விழுத்தண்டினார் தொண்டி ஆமூர்ச் சாத்தனார் தொல்கபிலர் நக்கண்ணையார் நக்கீரர் நப்பசலையார் நப்பண்ணனார் நப்பாலத்தனார் நம்பி குட்டுவன் நரிவெரூஉத் தலையார் நரைமுடி நெட்டையார் நல்லச்சுதனார் நல்லந்துவனார் நல்லழிசியார் நல்லாவூர் கிழார் நல்லிறையனார் நல்லுருத்திரனார் நல்லூர்ச் சிறுமேதாவியார் நல்லெழுநியார் நல்வழுதியார் நல்விளக்கனார் நல்வெள்ளியார் நல்வேட்டனார் நற்சேந்தனார் நற்றங் கொற்றனார் நற்றமனார் நன்பலூர்ச் சிறுமேதாவியார் நன்னாகனார் நன்னாகையார் நாகம்போத்தன் நாமலார் மகன் இளங்கண்ணன் நிகண்டன் கலைக்கோட்டுத் தண்டனார் நெடுங்கழுத்துப் பரணர் நெடும்பல்லியத்தனார் நெடும்பல்லியத்தை நெடுவெண்ணிலவினார் நெட்டிமையார் நெய்தற் கார்க்கியார் நெய்தற் சாய்த்துய்த்த ஆவூர் கிழார் நெய்தற்றத்தனார் நொச்சி நியமங்கிழார் நோய்பாடியார் பக்குடுக்கை நன்கணியார் படுமரத்து மோசிகீரனார் படுமரத்து மோசிகொற்றனார் பதடி வைகலார் பதுமனார் பரணர் பராயனார் பரூஉமோவாய்ப் பதுமனார் பறநாட்டுப் பெருங்கொற்றனார் பனம்பாரனார் பாண்டரங்கண்ணனார் பாண்டியன் ஆரியப்படைகடந்த நெடுஞ்செழியன் பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணனார் பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் பாண்டியன் பன்னாடு தந்தான் பாண்டியன் மாறன் வழுதி பாரதம் பாடிய பெருந்தேவனார் பாரிமகளிர் பார்காப்பான் பாலைக் கௌதமனார் பாலை பாடிய பெருங்கடுங்கோ பாவைக் கொட்டிலார் பிசிராந்தையார் பிரமசாரி பிரமனார் பிரான் சாத்தனார் புதுக்கயத்து வண்ணக்கன் கம்பூர்கிழான் புல்லாற்றூர் எயிற்றியனார் புறத்திணை நன்னாகனார் பூங்கணுத்திரையார் பூங்கண் உத்திரையார் பூங்கண்ணன் பூதங்கண்ணனார் பூதபாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு பூதம்புல்லனார் பூதனார் பூதன் தேவனார் பெருங்கண்ணனார் பெருங்குன்றூர் கிழார் பெருங்கௌசிகனார் பெருஞ்சாத்தனார் பெருஞ்சித்திரனார் பெருந்தலைச்சாத்தனார் பெருந்தேவனார் பெருந்தோட் குறுஞ்சாத்தன் பெரும்பதுமனார் பெரும்பாக்கன் பெருவழுதி பேயனார் பேய்மகள் இளவெயினி பேராலவாயர் பேரிசாத்தனார் பேரெயின் முறுவலார் பொதுக்கயத்துக் கீரந்தை பொதும்பில் கிழார் பொதும்பில் கிழார் மகனார் வெண்கண்ணியார் பொதும்பில் புல்லாளங் கண்ணியார் பொத்தியார் பொய்கையார் பொருந்தில் இளங்கீரனார் பொன்மணியார் பொன்முடியார் பொன்னாகன் போதனார் போந்தைப் பசலையார் மடல் பாடிய மாதங்கீரனார் மதுரை அளக்கர் ஞாழலார் மகனார் மள்ளனார் மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் மதுரை ஆசிரியர் கோடங்கொற்றனார் மதுரை இளங்கண்ணிக் கௌசிகனார் மதுரை இளங்கௌசிகனார் மதுரை இளம்பாலாசிரியன் சேந்தன் கூத்தனார் மதுரை ஓலைக்கடைக் கண்ணம் புகுந்தாராயத்தனார் மதுரை ஓலைக்கடையத்தார் நல்வெள்ளையார் மதுரைக் கடையத்தார் மகன் வெண்ணாகனார் மதுரைக் கணக்காயனார் மதுரைக் கண்டராதித்தனார் மதுரைக் கண்ணத்தனார் மதுரைக் கவுணியன் பூதத்தனார் மதுரைக் கள்ளிற் கடையத்தன் வெண்ணாகனார் மதுரைக் காமக்கணி நப்பாலத்தனார் மதுரைக் காருலவியங் கூத்தனார் மதுரைக் கூத்தனார் மதுரைக் கொல்லன் புல்லன் மதுரைக் கொல்லன் வெண்ணாகனார் மதுரைச் சுள்ளம் போதனார் மதுரைத் தத்தங்கண்ணனார் மதுரைத் தமிழக்கூத்தனார் நாகன் தேவனார் மதுரைத் தமிழக் கூத்தனார் மதுரைப் படைமங்க மன்னியார் மதுரைப் பாலாசிரியர் சேந்தன் கொற்றனார் மதுரைப் பாலாசிரியர் நப்பாலனார் மதுரைப் பாலாசிரியர் நற்றாமனார் மதுரைப் புல்லங்கண்ணனார் மதுரைப் பூதன் இளநாகனார் மதுரைப் பூவண்ட நாகன் வேட்டனார் மதுரைப் பெருங்கொல்லன் மதுரைப் பெருமருதனார் மதுரைப் பெருமருது இளநாகனார் மதுரைப் போத்தனார் மதுரை மருதங்கிழார் மகனார் சொகுத்தனார் மதுரை மருதங்கிழார் மகனார் பெருங்கண்ணனார் மதுரை மருதங்கிழார் மகன் இளம்போத்தன் மதுரை வேளாசன் மருங்கூர் கிழார் பெருங்கண்ணனார் மருங்கூர்ப் பட்டினத்துச் சேந்தன் குமரனார் மருங்கூர்ப் பாகை சாத்தன் பூதனார் மருதம் பாடிய இளங்கடுங்கோ மருதன் இளநாகனார் மலையனார் மள்ளனார் மாங்குடிமருதனார் மாங்குடி கிழார் மாடலூர் கிழார் மாதீர்த்தன் மாமிலாடன் மாமூலனார் மாயேண்டன் மார்க்கண்டேயனார் மாலைமாறன் - பாடல் 1 மாவளத்தன் மாறோக்கத்துக் காமக்கணி நப்பாலத்தனார் மாறோக்கத்து நப்பசலையார் மாற்பித்தியார் மிளைக் கந்தன் மிளைப் பெருங்கந்தன் மிளைவேள் தித்தன் மீனெறி தூண்டிலார் முக்கல் ஆசான் நல்வெள்ளையார் முடங்கிக் கிடந்த நெடுஞ்சேரலாதன் முடத்தாமக்கண்ணியார் - பொருநராற்றுப்படை முடத்திருமாறன் முதுகூத்தனார் முதுவெங்கண்ணனார் முப்பேர் நாகனார் முரஞ்சியூர் முடிநாகராயர் முள்ளியூர்ப் பூதியார் மூலங்கீரனார் மையோடக் கோவனார் மோசிகண்ணத்தனார் மோசிகீரனார் 
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.