Show all

இணையப் பரவல்! கமல் இணைப்புரை, பிக்பாஸ் நிகழ்ச்சியில் லாஸ்லியாவை மிஞ்சிய சம்பளம் பெற்றுள்ளாராம் ஜனனி

சம்பள விடையத்தில் லொஸ்லியாவை மிஞ்சியுள்ளாராம் ஜனனி, கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில். இந்தச் செய்தி பிக்பாஸ் நிகழ்ச்சி ஆர்வலர்களால், இணையத்தில் பேரளவாகப் பரப்பப்பட்டு வருகிறது.

05,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5124: விஜய் தொலைக்காட்சியில், கமல்காசன் இணைப்புரையாற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று வெளியேறிய ஜனனி வாங்கியுள்ள சம்பளம் குறித்த விவரம் இணையத்தில் பேரளவாகப் பரப்பப்பட்டு வருகிறது.

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று இலங்கை பெண் ஜனனி வெளியேற்றப்பட்டார்.

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த பருவத்தில், வெற்றியாளர் யாரென்று யூகிக்க முடியாத நிலையில், போட்டி நடைபெற்று வருகின்றது.

பிக்பாஸ் பருவம் தற்போது 6வது சென்று கொண்டிருக்கும் நிலையில், இதன் 3வது பருவத்தில் இலங்கையைச் சேர்ந்த லாஸ்லியா மற்றும் தர்சன் கலந்து கொண்டனர்.

தற்போது இவர்கள் இருவரும் திரையுலகில் சுறுசுறுப்பாக இயங்கி வரும் நிலையில், நேற்று வெளியேறிய ஜனனி லாஸ்லியாவை விட அதிக சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜனனி பிக்பாஸ் வீட்டிற்குள் நுழையும் முன்பே அவருக்கு நயவர்கள்படை தொடங்கப்பட்டது. ஆனாலும் இந்தக் கிழமை ஏடிகே வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஜனனி வெளியேறினார். 

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ஜனனிக்கு ஒரு நாளைக்கு ரூ.25 ஆயிரம் பேசப்பட்டிருந்த நிலையில், அவர் தங்கியிருந்த 70 நாட்களுக்கு பதினேழு லட்சத்து ஐம்பதாயிரம் சம்பளம் வாங்கியுள்ளாராம்.

ஆனால் இலங்கையில் இருந்து கலந்து கொண்ட போட்டியாளரான லாஸ்லியாவுக்கு மொத்தமாகவே ரூ.5 லட்சம் தான் சம்பளமாக வழங்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,468.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.