Show all

மீரா மிதுன் சிறையில் அடைப்பு! காதலனும் கைது

காணொளி வெளியிட்டுக்கு மீரா மிதுனுக்கு உறுதுணையாக இருந்த, அவரது காதலனையும், ஒன்றியக் குற்றப் பிரிவு காவலர்கள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

31,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5123: குறிப்பிட்ட சமூகத்தினர் பற்றி அவதூறாக பேசி, காணொளி வெளியிட்டு கைதான நடிகை மீரா மிதுன் சிறையில் அடைக்கப்பட்டார். மீரா மிதுனுக்கு உறுதுணையாக இருந்த, அவரது காதலனையும், ஒன்றியக் குற்றப் பிரிவு காவலர்கள் கைது செய்தனர்.

சென்னை சேத்துப்பட்டை சேர்ந்தவர் 34 அகவையுள்ள நடிகை மீரா மிதுன். மீரா மிதுன் விஜய் தொலைக்காட்சியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேரறிமுகமானவர். இவர், சூர்யா நடிப்பில் வெளிவந்த தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட படங்களில் சிறிய வேடங்களில் நடித்துள்ளார். அண்மையில், பட்டியல் இனத்தை சேர்ந்த குறிப்பிட்ட ஒரு சமூகத்தினர் பற்றி அவதூறாக பேசி, கீச்சுவில் காணொளி வெளியிட்டு இருந்தார். இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த வன்னியரசு, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

ஒன்றியக் குற்றப்பிரிவு சுழியம் காவல்துறையினர், மீரா மிதுன் மீது, ஏழு பிரிவுகளில் வழக்கு பதிந்து, விசாரணைக்கு அணியமாக வேண்டும் என, அழைப்பாணை அனுப்பினர். ஆனால், மீரா மிதுன் காதலனுடன் தலைமறைவானார். கேரள மாநிலம் ஆலப்புழாவில் பண்ணை வீட்டில் பதுங்கி இருந்த மீரா மிதுனை ஒன்றியக் குற்றப்பிரிவு காவலர், முந்;தாநாள் கைது செய்தனர். அவரை சென்னைக்கு அழைத்து வந்து, காவல்ஆணையர் அலுவலகத்தில் விசாரித்தனர். அப்போது, ‘என் வழக்கறிஞர் வந்தால் தான் பேசுவேன்’ என, அவர் அடம் பிடித்தார். காவல்துறைக்கு எதிராக சத்தமாக பேசி கூச்சலிட்டார்.

காவல்துறையினர் நேற்று இவரை, சைதாப்பேட்டை அறங்கூற்றுமன்றத்தில் அணியப்படுத்தி, பத்துநாள் அறங்கூற்றுமன்ற காவலில், புழல் சிறையில் அடைத்தனர். இந்நிலையில், மீரா மிதுன் அவதூறு காணொளி வெளியிட உறுதுணையாக இருந்த, சென்னை அம்பத்தூரை சேர்ந்த, இவரது காதலன் 26 அகவை சாம் அபிசேக், என்பவரையும் காவல்துறையினர் நேற்று கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.