Show all

படத்தின் பெயர் இரத்தம் ரணம் ரௌத்திரம்! ரௌத்திரம் பழகிய கொண்டாடிகள்

திரையரங்கத்தில் 'இரத்தம் ரணம் ரௌத்திரம்' (ஆர்.ஆர்.ஆர்) திரைப்படம் ஓடிக்கொண்டிருந்த நிலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டதில் கொண்டாடிகள் கொண்ட சினம்

11,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5123: இராஜமவுலி இயக்கத்தில் இராம்சரண் மற்றும் இளவல் இராமராவ் நடித்துள்ள 'இரத்தம் இரணம் ரௌத்திரம்' (ஆர்.ஆர்.ஆர்) என்னும் திரைப்படம் உலகமெங்கும் திரையரங்குகளில் இன்று வெளியானது.

இந்த நிலையில் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள திரையரங்கத்தில் 'இரத்தம் ரணம் ரௌத்திரம்' (ஆர்.ஆர்.ஆர்) திரைப்படம் ஓடிக்கொண்டிருந்த நிலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த கொண்டாடிகள் வாக்குவாதம் செய்து, திரையரங்கத்தில் இருந்த கண்ணாடிகளை நொறுக்கி சேதப்படுத்தினர் மேலும் திரைமுன் அமைக்கப்பட்டிருந்த முள்வேலியையும் தகர்த்தனர்.

இந்த தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் கொண்டாடிகளை அப்புறப்படுத்தினர். இந்த வன்செயல் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,198.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.