Show all

கணவரால் மீண்டும் தாக்குதலுக்கு ஆளாகியுள்ள வடஇந்திய நடிகை பூனம் பாண்டே!

நடிகை பூனம் பாண்டே, மும்பை காவல்துறையில் புகார் ஒன்றை அளித்தார். அதில் தமது கணவர் படப்பிடிப்பு தளத்தில் தன்னை அடித்துத் துன்புறுத்தியதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

23,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5123: நடிகை பூனம் பாண்டே, மும்பை காவல்துறையில் புகார் ஒன்றை அளித்தார். அதில் தமது கணவர் படப்பிடிப்பு தளத்தில் தன்னை அடித்துத் துன்புறுத்தியதாக குற்றஞ்சாட்டியுள்ளார். பூனம் பாண்டேயின் கணவர் சாம் பாம்பே இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் எழுத்தாளரும் ஆவார். 

இதனைத் தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் பூனம் பாண்டேவின் கணவரான சாம் பாம்பேவைக் கைது செய்தனர். தாக்குதலுக்கு உள்ளானதாக கூறப்படும் பூனம் பாண்டே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

சாம் பாம்பே மீது பூனம் பாண்டே புகார் கொடுப்பது இது முதல் முறையல்ல. கடந்தாண்டும் இதேபோல, சாம் பாம்பே கைது செய்யப்பட்டார். கடந்த ஆண்டில், இந்த இணையரின் திருமணம் முடிந்த இரண்டு கிழமையில், பூனம் பாண்டே, கணவர் தன்னைத் தாக்கி, துன்புறுத்துவதாக புகார் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து, சாம் பாம்பே உடனான தனது திருமண உறவை முடித்துகொள்ள நினைத்தார். இதனால், ஏற்கனவே மனைவியை துன்புறுத்தியதற்காக சாம்பாம்பேவை காவல்துறையினர் கோவாவில் கைது செய்தனர்.

இதுதொடர்பாக பூனம் பாண்டே கூறும்போது, தனது உறவு எப்போதுமே துன்பப்பாடகவே இருந்து வருவதாகவும், தன்னை ஒரு மிருகத்தைப் போல அடித்து துன்புறுத்தும் ஆளுடன் உறவை தொடர்வது நல்லதல்ல என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில், தற்போது கணவரால் மீண்டும் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளார் பூனம் பாண்டே. தலை, கண் மற்றும் முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளதால் பூனம் பாண்டே தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,062.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.