சிவகார்த்திகேயனின் படத்தில் நடிக்க உக்ரைன் நடிகை ஒப்பந்தமாகியுள்ளார். ஆவரை வரவேற்று சிவகார்த்திகேயன் கீச்சுவில் பதிவிட்டுள்ளார். 08,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயனின் படத்தில் நடிக்க உக்ரைன் நடிகை ஒப்பந்தமாகியுள்ளார். நடிகர் சிவவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் 'மருத்துவர்'. தற்போது சிவகார்த்திகேயன் டான், அயலான் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இதைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் தெலுங்கு திரைப்படத்தின் முன்னணி இயக்குனர் அனுதீப் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் இந்த திரைப்படத்திற்கு 'எஸ்.கே-20' என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தை சிறி வெங்கடேஸ்வரா திரைப்படம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து சுரேஷ் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இசையமைப்பாளர் தமன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இந்த நிலையில் எஸ்.கே-20 படத்தின் கதைத்தலைவி குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் 'எஸ்.கே-20' படத்தில் உக்ரைன் நாட்டை சேர்ந்த தோற்றக்கலை அழகியும், நடிகையுமான மரியா ரியாபோசாப்கா நடிக்க உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இவர் ஹாட்ஸ்டாரில் வெளியான 'சிறப்பு செயலி' ஹிந்தி இணையத் தொடரில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய கீச்சுப் பக்கத்தில் அந்த அறிவிப்பை பகிர்ந்து மரியா ரியாபோசாப்காவிற்கு வரவேற்பு தெரிவித்துள்ளார்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,195.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.