Show all

தமிழர் வீரவிளையாட்டு கபடி

தமிழர்களால் நீண்ட நெடுங்காலமாக விளையாடப்படும் வீரவிளையாட்டு கபடி. சடுகுடு அல்லது பலிஞ்சடுகுடு என்றும் இந்த விளையாட்டை அழைப்பர்.

ஏறு தழுவுதல் அல்லது சல்லிக்கட்டிற்கு அணியமாகும்;; பயிற்சியே கபடி என்ற பெயரால் பல காலமாக தமிழர்களால் விளையாடப்பட்டு வருகிறது.

இவ்விளையாட்டு இரு அணிகளுக்கு இடையே நிகழும் ஆட்களைப் பிடிக்கும் ஒரு போட்டி. ஒவ்வொரு அணியிலும் ஏழு பேர் இருப்பர். மொத்த விளையாட்டு நேரம் 40 மணித்துளிகள்.

இவ்;விளையாட்டிற்கான ஆடுகளம் வெறும் நீள்சதுரமான இடம். இந்த ஆடுகளத்தை ஒரு நடுக்கோட்டால் இரண்டாக பிரித்து ஒருபக்கத்துக்கு ஒரு அணியாக இரு அணியினரும் இருப்பர். ஆட்டக்காரர்கள் எப்பொழுதும் புற எல்லைக்கோடுகளைத் தாண்டி செல்லலாகாது. இவ்விளையாட்டுக்கு ஒரு நடுவரும் தேவை.

சல்லிக்கட்டை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட விளையாட்டு கபடி. எதிரணிக்கு செல்லும் வீரர் மாட்டைப்போல் கருதப்படுவார். அவ்வீரரை தொடவிடாமல் மடக்கி பிடிப்பது, மாட்டை முட்ட விடாமல் அடக்குவதற்கு சமமாகும்.

ஒரு அணியில் இருந்து யாரேனும் ஒருவர் புறப்பட்டு நடுக்கோட்டைத் தொட்டுவிட்டு ஒரே மூச்சில் கபடிக் கபடி என்று விடாமல் பாடிக் கொண்டே எதிர் அணியினர் இருக்கும் பகுதிக்கு சென்று எதிர் அணியினரைக் கையாலோ, காலாலோ தொட்டுவிட்டு எதிர் அணியினரிடம் பிடிபடாமல் நடுக்கோட்டைத் தாண்டி தம் அணியிடம் திரும்பிவரும் ஒரு வகை விளையாட்டு. தொடுபட்டவர் ஆட்டம் இழப்பார். ஆனால் எதிரணியினர் சூழ்ந்து பிடிக்க வருவர். மூச்சு விடாமல், கபடிக் கபடிக் என்று பாடிக் கொண்டே எதிராளியைத் தொட்டுவிட்டு அகப்படாமல் திரும்பிவரவேண்டும், அகப்பட்டால் சென்றவர் ஆட்டமிழப்பார். தம் அணிக்குத் திரும்பும் முன் பாடுபவர் பாட்டை நிறுத்தினாலும் ஆட்டம் இழப்பர்.

கபடிக் கபடிக் என்பதை

நாந்தான் வீரன்டா

நல்லமுத்துக்கோன் பேரன்டா

வௌ;ளிச் சிலம்பெடுத்து

விளையாட வாரன்டா

தங்கச் சிலம்பெடுத்துத்

தாலிகட்ட வாரன்டா

சடுகுடு சடுகுடு சடுகுடு

சடுகுடு.

என்றும்

கீத்து கீத்துடா

கீரைத் தண்டுடா

நட்டு வச்சன்டா

பட்டுப் போச்சுடா

போச்சுடா போச்சுடா.....

என்றும் பாடிச் செல்வதும் உண்டு.

ஆடுகளம், மேடு பள்ளம் இல்லாத ஒரு சமதளமாக இருக்க வேண்டும். ஆட்கள் கீழே விழுவதும், இழுக்கப்படுவதும் நிகழ்வதால், தரை மண் அல்லது மரத்தூள், மணல்,பஞ்சு மெத்தை பரப்பியதாக இருக்கவேண்டும். கட்டாந்தரையாக இருப்பது நல்லதல்ல.

சடுகுடு உலகக்கோப்பை முதன்முதலாக 2004ஆம் ஆண்டில் ஆடப்பட்டது. பின்னர் 2007ஆம் ஆண்டிலும் 2010ஆம் ஆண்டிலும் ஆடப்பட்டன. இதுவரை இந்தியாவே வெல்லப்படாத உலகக்கோப்பை வாகையாளராக இருந்து வருகிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.