Show all

நீட் டுக்கு எதிராக போராடிய மாணவரின் தந்தையை அடித்து உதைத்தனர் பாஜகவினர்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நகரில்-

1186 மதிப்பெண் எடுத்தும் இடம் கிடைக்காததைக் கண்டித்து போராடிய மாணவரின் தந்தையை அடித்து உதைத்தனர் பாஜகவினர்!

பாஜக அரசைக் கண்டித்துப் போராட்டம் நடத்திய மாணவரின் தந்தையை பாஜகவினர் சரமாரியாக அடித்து உதைத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

செங்கத்தில் பாஜக ஒன்றிய செயற்குழு பொதுக் கூட்டம் நடந்ததது. இந்த நிலையில் கூட்டம் நடந்த இடத்திற்கு வந்த ஐயப்பன் என்பவர் பாஜக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்.

தனது மகன் பாலாஜ பனிரெண்டாம் வகுப்பு தேர்வில் 1186 மதிப்பெண் பெற்றுள்ளதாகவும், ஆனால் நீட்டில் மதிப்பெண் குறைந்ததால் மருத்துவ இடம் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதற்கு பாஜக நடுவண் அரசுதான் காரணம் என்றும் கூறி அவர் போராட்டம் நடத்தினார். இதையடுத்து அங்கு கூடியிருந்த பாஜகவினர் ஐயப்பனை சரமாரியாக அடித்து உதைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அங்கிருந்த காவல்துறையினர் ஐயப்பனை மட்டும் கைது செய்து அங்கிருந்து கூட்டிச் சென்றனர். பாஜகவினர் யாரும் கைது செய்யப்படவில்லை.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.