07,தை,தமிழ்தொடர்ஆண்டு-5119: தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோகித் பதவியேற்ற பிறகு ஒவ்வொரு மாவட்டமாக சென்று நடுவண் அரசின் தூய்மை பாரதம் திட்டத்தின் கீழ் நாடும் நகரமும் தூய்மையாக இருக்கிறதா என்று ஆய்வு நடத்தி வருகிறார். இதன் தொடர்ச்சியாக தர்மபுரி மாவட்டத்தில் ஆளுநர் பன்வாரிலால் இன்று ஆய்வு மேற்கொண்டார். காலை 9.20 மணிக்கு விருந்தினர் மாளிகையில் இருந்து காரில் புறப்பட்ட ஆளுநர் முதலில் ஒட்டப்பட்டி பகுதிக்கு சென்று அங்குள்ள கக்கஞ்சிபுரத்தில் தூய்மை பாரதம் திட்டம் குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். கக்கஞ்சிபுரத்தில் தூய்மை பாரதம் திட்டத்தின் கீழ் புதிதாக வீட்டின் முன்பு கட்டப்பட்ட தனிமனித கழிப்பிடத்தை பார்வையிட்டு, கழிப்பிடத்தை பராமரிப்பு முறைகள் குறித்து பயனாளிகளுக்கு விளக்கி கூறினார். அந்த பகுதி மக்களிடம் உங்களுடைய வீடுகளையும், கழிவறைகளையும், சுற்றுப்புற பகுதிகைகளையும் எப்போதும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். தூய்மையாக வைத்திருந்தால் நோய்கள் எதுவும் பரவாது என்றும் ஆளுநர் தெரிவித்தார். பின்னர் அப்பகுதி மக்களிடம் தூய்மை பாரதம் குறித்து துண்டு பிரசுரத்தை ஆளுநர் வழங்கி உறுதி மொழி எடுக்க செய்தார். அதாவது கழிப்பிடங்களையும், சுற்றுப்புறங்களையும் தூய்மையாக வைத்திருப்போம். திறந்த வெளியில் மலம் கழிக்க மாட்டோம். கழிவறையைத் தான் பயன்படுத்துவோம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். அப்போது ஆளுநருடன் உயர்க்கல்வி துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், ஆட்சியர் விவேகானந்தன், மாவட்ட வருவாய் அதிகாரி காளிதாஸ் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டு இந்த விழிப்புணர்வு பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து ஆளுநர் ஒட்டப்பட்டியில் உள்ள வள்ளுவர்நகர் பகுதியில் தேங்கிகிடந்த குப்பைகளை அள்ளி தூய்மை படுத்தினார். அப்போது அங்குள்ள கிராம ஊராட்சி சேவை மையம் அருகே நிறைய குப்பைகள் தேங்கி கிடந்தது. இதை பார்த்த ஆளுநர் அரசு அலுவலகம் அருகே நிறைய கும்பைகள் தேங்கி கிடந்தால் எப்படி? என ஆட்சியரிடம் கேட்டார். உடனடியாக அந்த குப்பைகளை அகற்ற ஆளுநர் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒட்டப்பட்டி வௌ;ளாளர் பள்ளி முன்பு தூய்மை பாரதம் குறித்து தானிகளுக்கு கருப்பு விளம்பர அட்டை ஓட்டினார். ஆளுநர் ஆய்வு செய்ய உள்ள இடங்களில் எல்லாம் உள்ளூர் சட்டம்-ஒழுங்கு காவலர், ஆயுதப்படை காவலர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஆளுநர் தங்கி உள்ள ஆட்சியர் அலுவலகத்தையொட்டிள்ள விருந்தினர் மாளிகையிலும் ஏராளமான காவலர்கள் குவிக்கப்பட்டனர். மேலும் வழிநெடுகிலும் 100-க்கும் அதிகமான காவலர் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். கோவை மேற்கு மண்டல ஐ.ஜி. உத்தரவின் பேரில், சேலம் சரக டி.ஐ.ஜி. மேற்பார்வையில் போலீஸ் சூப்பிரண்டு பண்டிகங்காதர் தலைமையில் இந்த பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. முன்னதாக பார்வதிபுரம் 66 அடி சாலையில் உள்ள உணவு சேமிப்பு பாதுகாப்பு கிடங்கில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆய்வு செய்ய இருப்பதாக அறிந்து தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி, ஆதி தமிழர் பேரவை ஆகியவை அங்கு சென்று ஆய்வு செய்ய எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி காட்டி ஆர்ப்பாட்டம் செய்ய தயராக இருந்தனர். ஆனால், ஆளுநர் அங்கு செல்லவில்லை. கக்கஞ்சிபுரத்திற்கு சென்றார். இதனால் கருப்பு கொடி காட்ட இருந்த கட்சியினர் அதிர்ச்சியும், ஏமாற்றமும் அடைந்தனர். பின்னர் ஒட்டப்பட்டி பகுதிக்கு சென்று தி.மு.க. மாவட்ட செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான தடங்கம் சுப்பிரமணி தலைமையில் தி.மு.க.வினர் சுமார் 200 பேர் கருப்பு கொடி காட்டி ஆளுநர் ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சொன்னதைச் சொல்லுமாம் கிளிப்பிள்ளை என்ற கதையாக நடுவண் பாஜக அரசின் ஏவலர் போல, தமிழகத்தில் ஆளுநராகப் பணியேற்றதில் இருந்து நடுவண் அரசின், கழிப்பிடம் கட்டி ஆய் போங்கள் என்ற ஒரே திட்டத்திற்காக ஊர் ஊராக அரசு நிருவாகம் முழுவதையும் இழுத்துக் கொண்டு போவதற்கு ஒரு ஆளுநர். ஆளுநர் மேற்கொள்ளும், நடுவண் அரசின், கழிப்பிடம் கட்டி ஆய் போங்கள் என்ற ஒரே திட்டத்திற்கான ஆய்வின் மூலம் ஏதோ தமிழக உரிமையையே தட்;டிப் பறிப்பது போல் துரத்தி துரத்தி கருப்புக் கொடி காட்ட ஒரு கூட்டம். ஏன் இந்த கதி நேர்ந்தது தமிழகத்திற்கு. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,673
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



