Show all

துஞ்சினார், தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில்! இலங்கைக்கு அஞ்சி இந்தியாவில் தஞ்சமானவர்

13,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தூத்துக்குடி ஸடெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியாகினர். அவர்களில் கே.கந்தையா அகவை58 என்பவரும் ஒருவர்.

இலங்கை அகதியான இவர் தூத்துக்குடி சிலோன் காலனியில் மனைவி செல்வமணி, மகன் ஜெகதீஸ் வரன், ஆகியோருடன் தங்கியிருந்தார். 

கட்டுமான வேலை செய்து வந்த இவர், ஈழத்தில் தான் போராட்டத்திற்கு மரியாதை இல்லாமல் தமிழினத்தை கூண்டோடு அழித்தனர். தமிழகத்தில் போராட்டத்தின் மீது அடக்கு முறை கிடையாதே என்ற நம்பிக்கையோடு ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். ஸ்டெர்லைட் எதிர்ப்பு 100-வது நாள் போராட்டத்தின் போதும் ஆட்சியர் அலுவலகம் சென்ற அவர் காவல்துறையினரின் துப்பாக்கி குண்டுக்கு இரையானார். வெள்ளை வேட்டி மற்றும் வெள்ளை சட்டை அணிந்து சென்ற அவர் ரத்த வெள்ளத்தில் மண்ணில் பிணமாக கிடந்தார்.

இந்தக் காணொளி அனைத்து தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பது யார்? என்ற கேள்வியை எழுப்பியது. 

அவரது மனைவி செல்வமணிக்கோ தனது கணவர் துப்பாக்கி சூட்டில் பலியானது மிகத் தாமதமாகவே தெரிந்தது.

இலங்கையில் ராணுவ தாக்குதலுக்கு அஞ்சி உயிர் பிழைக்க மற்ற தமிழர்களுடன் நாங்களும் கடந்த 35ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா வந்தோம். தற்போது தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் அவர் பலியாகி விட்டாரே என்று கதறி கதறி அழுதார். துப்பாக்கி சூட்டில் பலியான கந்தையாவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக சிலோன் காலனியில் அவரது உருவப்படம் பொறித்த பதாகை வைக்கப்பட்டுள்ளது.

ஆனால் அவரது ஒரே மகன் ஜெகதீஸ்வரனுக்கோ தனது தந்தை மரணம் அடைந்தது தெரியவில்லை. ஏனெனில் பிறவியிலேயே மனவளர்ச்சி குன்றியவர். அவரால் பேச முடியாது. ஆனால் மற்றவர்களின் நடவடிக்கையை அவரால் புரிந்து கொள்ள முடியும். இவர் தனது தந்தை கந்தையா மீது அதிக பாசம் கொண்டவர். அவர் ஊட்டி விட்டால் தான் உணவு சாப்பிடுவார்.

தற்போது அவர் உயிருடன் இல்லாததால் ஜெகதீஸ்வரன் கடந்த 5 நாட்களாக உணவு சாப்பிட மறுத்து பட்டினி கிடக்கிறார். இரவில் தனது தந்தையை கட்டிப்பிடித்து தான் தூங்குவார். தற்போது அவர் இல்லாததால் தூக்கமின்றி தவிக்கிறார். அவர் இறந்தது கூட தெரியாமல் பதாகை அருகேயே நிற்கிறார். இது அப்பகுதி மக்களின் நெஞ்சங்களை கணக்க செய்கிறது.

கந்தையாவின் வருமானத்தை மட்டுமே நம்பியிருந்த அவரது குடும்பத்தை காப்பாற்ற பாதுகாவலர் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,800. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.