Show all

இலங்கைக்கு எதிரான முதல் T20: அபார வெற்றி பெற்றது இந்தியா

இலங்கை அணி இந்தியாவில் சுற்று பயணம் மேற்கொண்டு டெஸ்ட், ஒருநாள் மற்றும் T20 தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களை ஏற்கனவே இந்தியாவிடம் இலங்கை இழந்துள்ள நிலையில் தற்போது மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடரின் முதல் போட்டி ஒடிஸா மாநிலம் கட்டாக்கில் உள்ள பாராபதி மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. 

அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக தொடக்க வீரர் கே.எல்.ராகுல் 48 பந்துகளில் 7 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 61 ரங்களும், தோனி 4 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 39 ரன்களும் மற்றும் பாண்டே 2 பவுண்டரி, 2 சிக்ஸருடன் 32 ரன்களும் குவித்தனர். இலங்கை அணி தரப்பில் மேத்யூஸ், பெரேரா, பிரதீப் ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர்.

இதையடுத்து 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 16 ஓவர்களில் வெறும் 87 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்தது. இதன் மூலம் இந்திய அணி 93 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இலங்கை அணியில் அதிகபட்சமாக தரங்கா 23 ரன்களும், பெரேரா 19 ரன்களும், நிரோசன் 13 ரன்களும் மற்றும் சமீரா 12 ரன்களும் குவித்தனர். மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இழக்க எண்களில் ஆட்டமிழந்தனர். இந்திய அணி தரப்பில் சாகல் 4 விக்கெட்டுகளையும், பாண்டயா 3 விக்கெட்டுகளையும், யாதவ் 2 விக்கெட்டுகளையும் மற்றும் ஜாதவ் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.