Show all

வெளிநாட்டின் தமிழ் இருக்கைகள் மீது மட்டும் வஞ்சக நெஞ்சம் காட்டும் ஒன்றிய அரசு

தற்போது இந்திய கலாச்சார உறவுக்கான அவை சார்பில் வெளியிடப்பட்ட இருக்கைகளுக்கான விளம்பரத்தில் தமிழ் இடம் பெற்றுள்ளது. ஆனால், அதற்காக விண்ணப்பிக்கும் இந்திய கலாச்சார உறவுக்கான அவை இணையதளத்தில் தமிழ் இடம்பெறவில்லை.

13,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5124: வெளிநாடுகளில் இந்திய பேராசிரியர் இருக்கைகள் நிரப்ப, இந்திய கலாச்சார உறவுக்கான அவையின் விளம்பரம் வெளியாகி உள்ளது. இதில், போலந்தின் இரண்டு வருகைதரு தமிழ்ப் பேராசிரியர் இருக்கைகள் இடம்பெறவில்லை.

இந்திய ஒன்றிய அரசின் கலாச்சாரத் துறையின் கீழ் செயல்படும் இந்திய கலாச்சார உறவுக்கான அவையில், கடந்த ஐம்பத்தி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே வெளிநாட்டு கல்வி நிறுவனங்களில் இந்திய பேராசிரியர்களுக்கான வருகைதரு இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்திய கலாச்சார உறவுக்கான அவை மூலம் தேர்வாகும் இவர்களுக்கான ஊதியத்தை ஒன்றிய அரசு வழங்கும். உணவு மற்றும் தங்குமிடங்களை தொடர்புடைய நாடுகளின் கல்வி நிறுவனங்கள் வழங்குகின்றன.

தமிழ், சம்ஸ்கிருதம், ஹிந்தி, வரலாறு, பொருளாதாரம், தத்துவம், பெங்காலி நாட்டுப்புற நடனம், உருது, புத்த மதம், இந்தியக் கல்வி என சுமார் 11 வகை பாடப் பிரிவுகளுக்கான இருக்கைகள் உள்ளன. 

வெளிநாடுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட இருக்கைகள் இருந்தன. ஆனால், ஒன்றியத்தின் பாஜக ஆட்சிக்குப் பிறகு படிப்படியாகக் குறைந்து தற்போது 51 இருக்கைகள் மட்டுமே உள்ளன. அதிகபட்சமாக ஹிந்தி, அடுத்த நிலையில், சம்ஸ்கிருதமும் உள்ளன.

இந்தப் பட்டியலில் தமிழுக்காக வெறும் 2 இருக்கைகள், போலந்து நாட்டில் உள்ளன. போலந்து நாட்டின் வார்ஸா பல்கலைக்கழகத்திலும், கிராக்கூப் யாகி எலோனியன் பல்கலைக்கழகத்திலும் இவை அமைந்துள்ளன. 

இவற்றுக்கு, கடந்த எட்டு ஆண்டுகளாக பேராசிரியர்கள் அமர்த்தப்படவில்லை. ஏழு ஆண்டுகளுக்கு முன்பு  கேரள பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறைத் தலைவர் ஜெய கிருஷ்ணனை இந்திய கலாச்சார உறவுக்கான அவை தேர்வு செய்தது. ஆனால் அவரையும் போலந்துக்கு அனுப்பவில்லை. 

தற்போது இந்திய கலாச்சார உறவுக்கான அவை சார்பில் வெளியிடப்பட்ட இருக்கைகளுக்கான விளம்பரத்தில் தமிழ் இடம் பெற்றுள்ளது. ஆனால், அதற்காக விண்ணப்பிக்கும் இந்திய கலாச்சார உறவுக்கான அவை இணையதளத்தில் தமிழ் இடம்பெறவில்லை.

இதுகுறித்து தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும், வார்ஸா தமிழ் இருக்கையில் வருகைதரு பேராசிரியராக பணியாற்றிய ஜி.பாலசுப்பரமணியன், 'ஹிந்தி, சம்ஸ்கிருதத்தை விடப் பழமையானதும் பல வெளிநாடுகளில் ஆட்சி மொழியாகவும் உள்ள தமிழுக்கு போலந்தில் மட்டும் 2 இருக்கைகள் உள்ளன. 

அதற்கு கூட பல ஆண்டுகளாக பேராசிரியர்கள் நியமிக்கப்படாதது வருந்தக் கூடியது. போலந்தின் மாணவர்கள் தமிழைக் கற்க அதிக ஆர்வம் காட்டுபவர்கள். எனவே, உடனடியாக இந்திய கலாச்சார உறவுக்கான அவை பட்டியலில் தமிழை சேர்ப்பதுடன் மேலும் பல வெளிநாடுகளில் இதற்காக இருக்கைகள் உருவாக்கப்பட வேண்டும்' என்று தனது வருத்தத்தைப் பதிவிட்டுள்ளார்.

வார்ஸா பல்கலைக்கழகத்தில் 48 ஆண்டுகளாக இந்திய மொழிகளில் தமிழ் இருக்கை உள்ளது. கிராக்கூப் யாகி எலோனியன் பல்கலைக்கழகத்தில் பதினான்கு ஆண்டுகளாக தமிழ் இருக்கை உள்ளது. 

தொடக்கக் காலங்களில் போலந்து இருக்கைகளுக்கு நியமிக்கப்பட்ட பேராசிரியருக்கு 3 ஆண்டுக்கு மேல்பணி வாய்ப்பு கிடைத்தது. இதில், அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் தங்கும் இடமும், உணவும் போலந்து நாட்டால் அளிக்கப்பட்டது. பிறகு பேராசிரியரின் குழந்தைகளுக்கானச் செலவு குறைக்கப்பட்டது அடுத்து பணிக் காலம் ஓராண்டானது, பின்னர் வெறுமனே ஒன்பது மாதமாக குறைக்கப்பட்டது. இதுபோன்ற நெருக்கடி, ஹிந்தி, சம்ஸ்கிருதம் உள்ளிட்ட மற்ற பாடப் பிரிவுகளில் இருக்கவில்லை என்று தெரியவருகிறது.

தமிழின்- தானாக வளரும் பல்வேறு வகையான வாய்ப்புகளுக்கும்- தடைபோட வேண்டும் என்பதில் ஒன்றிய ஆட்சியில் கடந்த எழுப்பத்தி நான்கு ஆண்டுகளாக அதிகாரத்;தில் இருந்து வரும் வடஇந்தியர்கள் கண்ணும் கருத்துமாக பயணித்து வருகின்றனர்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,324.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.