சென்னை கிரீன்ஸ்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தை காலி
செய்யும்படி தமிழக அரசு கூறிவிட்டதால், போயஸ் தோட்டம் அருகில் உள்ள வீனஸ் காலனியில்
உள்ள வீட்டில் குடியேறுகிறார் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். தமிழகத்தில்
யார் ஆட்சிக்கு வந்தாலும் அமைச்சர்கள் குடியேறுவது சென்னை கிரீன்ஸ்வேஸ் சாலையில் உள்ள
வீடுகளில்தான். முதல்வராக இருந்த பன்னீர்செல்வமும் கிரீன்ஸ்வேஸ் சாலையில் உள்ள வீட்டில்தான்
வசித்து வந்தார். இதனிடையே, முதல்வர் பதவியை அவர் ராஜினாமா செய்ததோடு, சசிகலாவுக்கு
எதிராக போர்க்கொடி தூக்கி வருகிறார். இந்நிலையில்,
அமைச்சர்கள் மட்டுமே குடியேறும் கிரீன்ஸ்வேஸ் சாலையில் உள்ள வீட்டை காலி செய்யும்படி
பன்னீர்செல்வத்துக்கு தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. தமிழக அரசின் கெடு முடிய இன்னும்
மூன்றே நாட்கள்தான் இருக்கிறது. இதனிடையே, போயஸ் தோட்டம் அருகே உள்ள வீனஸ் காலனிக்கு
பன்னீர்செல்வம் இன்று வந்தார். அங்கிருந்த வீடு அவருக்கு பிடித்துவிட்டதால் அந்த வீட்டில்
அவர் குடியேறுகிறார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.