Show all

டி.என்.பி.எல். கிரிக்கெட்: சாம்பியன் பட்டம் வென்றது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்

தூத்துக்குடி பேட்ரியாட்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், திருவள்ளூர் வீரன்ஸ், திருச்சி வாரியர்ஸ், காரைக்குடி காளை, மதுரை சூப்பர் ஜெயன்ட் மற்றும் கோவை கிங்ஸ் ஆகிய எட்டு அணிகள் பங்கேற்ற 2–வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 22–ந்தேதி தொடங்கியது.  இந்நிலையில் இறுதிப்போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீசும், தூத்துக்குடி பேட்ரியாட்சும் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் மோதியது.

இதில் டாஸ் வென்ற தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 143 ரன்களை மட்டுமே குவித்தது தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி. இதனை தொடர்ந்து 144 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன்  விளையாடிய சேப்பாக் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. 

சத்திய மூர்த்தி சரவணன் ஆட்டநாயகனாகவும் டூட்டி பேட்ரியாட்ஸ் அணியின் வாஷிங்டன் சுந்தர் தொடர்நாயகனாகவும்  தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.