Show all

ஒலிம்பிக் சிறகுப்பந்தில் வெண்கலம் வென்றுள்ளார் சிந்து!

ஒலிம்பிக் வரலாற்றில் தனிநபர் பிரிவில் இரண்டு பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என புதிய வரலாறு படைத்தார் சிந்து.

17,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5123: ஜப்பானின் டோக்கியோவில் 32வது ஒலிம்பிக் போட்டி நடக்கிறது. சிறகுப்பந்தில் பெண்கள் ஒற்றையர் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்தியாவின் சிந்து, சீனாவின் ஜியாவோ பிங்கை எதிர்கொண்டார். 

53 நிமிட போராட்டத்தின் முடிவில் சிந்து 21-13, 21-15 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்று, வெண்கலப்பதக்கம் தட்டிச் சென்றார்.

ஒலிம்பிக் வரலாற்றில் தனிநபர் பிரிவில் இரண்டு பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என புதிய வரலாறு படைத்தார் சிந்து. கடந்த 2016 ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற இவர், இம்முறை டோக்கியோவில் வெண்கலம் கைப்பற்றினார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.