Show all

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட்: இங்கிலாந்தை வீழ்த்தி இதுதிப்போட்டிக்குள் நுழைந்தது பாகிஸ்தான்

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி முதல் அரை இறுதியில், இங்கிலாந்து அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய பாகிஸ்தான் பைனலுக்கு முன்னேறியது. கார்டிப், சோபியா கார்டன்ஸ் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்துவீசியது. அதன் பிறகு களமிறங்கிய இங்கிலாந்து அணி 49.5 ஓவரில் 211 ரன் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. பாகிஸ்தான் தரப்பில் ஹசன் அலி 3, ஜுனைத் கான், ரம்மான் ரயீஸ் தலா 2, ஷதாப் கான் 1 விக்கெட் வீழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து, 50 ஓவரில் 212 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 37.1 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 215 ரன் எடுத்து அபாரமாக வென்றது. பாபர் 38 ரன், ஹபீஸ் 31 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதன் மூலம் பாகிஸ்தான் பைனலுக்கு முன்னேறியது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.