Show all

இறுதிவரை வந்த இந்தியா! வாகையர் பட்டத்தை வென்ற ஆஸ்திரேலிய மகளிர் அணி. 20 ஓவர் உலக கோப்பை துடுப்பாட்டம்

ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்னில் நடைபெற்ற மகளிர் 20 ஓவர் உலகக்கோப்பை துடுப்பாட்டப் போட்டித் தொடரின் இறுதி போட்டியில் 5வது முறையாக வாகையர் பட்டத்தை வென்றது ஆஸ்திரேலிய மகளிர் அணி.

26,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: பெண்களுக்கான 7-வது 20 ஓவர் உலக கோப்பை துடுப்பாட்டப் போட்டி ஆஸ்திரேலியாவில் கடந்த மாதம் தொடங்கி நடந்து வந்த, 10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் சுற்றுக்கள் முடிவில் இந்தியாவும், நடப்பு வாகையர் ஆஸ்திரேலியாவும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.

இந்தநிலையில் மகளிர் உலகக்கோப்பை தொடரின் இறுதி போட்டி நேற்று ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்னில் 12.30 மணிக்கு தொடங்கியது.  இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி பந்தடிப்பை தேர்வு செய்தது. முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய மகளிர் அணி 20 ஓவரில் 4 போட்டியாளர் இழப்புக்கு 184 ஓட்டங்கள் எடுத்தது.   இதனையடுத்து 185 ஓட்டங்கள்  எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய மகளிர் அணி 19.1 ஓவரில் அனைத்து போட்டியாளர்களையும் இழந்து 99 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து இந்திய அணி தோல்வி அடைந்தது.

ஆஸ்திரேலிய  மகளிர் அணியில் அதிகபட்சமாக பெத் முனி 78 ஹீலி 75 ஓட்டங்கள் எடுத்தனர். இந்திய மகளிர் அணியில் அதிகபட்சமாக தீப்தி சர்மா 33, வேதா 19 ரிச்சா கோஷ் 18 ஓட்;டங்கள் எடுத்தனர். இந்திய மகளிர் அணியில் அதிகபட்சமாக தீப்தி சர்மா 2, பூனம், ராதா தலா ஒரு போட்டியாளரை வீழ்த்தினர். மகளிர் 20 ஓவர் உலககோப்பை கிரிக்கெட்போட்டியில் 5 வது முறையாக வாகையர் பட்டத்தை  ஆஸ்திரேலிய மகளிர் அணி வென்றது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.