Show all

உலகில் தமிழர்கள் மட்டுமே கோயிலோடு இணைந்த குடிகளாக இல்லை

உலகினரில் தமிழர் விடுத்து ஏனையோர்- கிறித்துவமதம், முகமதியமதம், புத்தமதம், சமனமதம், சீக்கியமதம், என்கிற ஐவகை மதங்களில் ஏதாவதொன்றில் கோயிலோடு இணைந்த குடிகளாகவே வாழ்கின்றனர். உலகில் தமிழர்கள் மட்டுமே கோயிலோடு இணைந்த குடிகளாக இல்லாமல், டாஸ்மாக் அரசியல்வாதிகளோடு இணைந்த குடிகளாக இயங்க நிர்பந்திக்கப் பட்டிருக்கிறார்கள்.

18,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: உலகில் 1.தமிழர் முன்னெடுத்த மதம். 2.கிறித்துவமதம், 3.முகமதியமதம், 4.புத்தமதம், 5.சமனமதம், 6.சீக்கியமதம், இந்த ஆறும் உலகின் அடிப்படையான மதங்கள். 

இந்த ஆறு மதங்களில் பின்னதாகச் சொல்லப்பட்ட கிறித்துவமதம், முகமதியமதம், புத்தமதம், சமனமதம், சீக்கியமதம், என்கிற ஐந்து மதங்களும் ஒற்றை தெய்வ வழிபாட்டை மேற்கொண்;டு வருகின்றன. அந்த ஐந்து மதங்களும் தங்கள் தங்கள் ஒற்றைத் தெய்வத்திற்கு உலகம் முழுவதும் கோயில்கள் கட்டியுள்ளன. அந்தக் கோயில்களின் கட்டுப்பாடு, நிருவாகத்தை மதத் தலைவர்கள் பார்த்துக் கொள்கிறார்கள். அந்தந்த மதத்தைச் சார்ந்த யாரும் அந்தத் மதத் தலைவராக ஆக முடியும். 

ஆனால் அந்தந்த மதங்களுக்கு கோயில் சார்ந்த மதக்கல்வி இருக்கின்றன. அந்த மதக்கல்வி பயின்றவர்கள் மட்டுமே முதன்மை அடிப்படையில் மதத்தலைவராக ஆக முடியும். அவர்களுக்கு மதக்கல்வி வாழ்க்கையாகவும் தொழிலாகவும் அமைகிறது. அந்தந்த மதத்தினர் கோயிலோடு இணைந்த குடிகளாக வாழ்கின்றனர். 

முதலாவதாகச் சொல்லப் பட்ட தமிழர் முன்னெடுத்த மதமானது இன்று ஹிந்து மதம் என்று அழைக்கப் படுகிறது. முகமதியர்கள் இந்தியாவிற்கு படையெடுத்து வந்த போது, அப்போது பெயரில்லாமல் இந்தியாவில் காணப்பட்ட தங்கள் மதத்திற்கு மாறுபட்ட பல தெய்வ வழிபாடு மற்றும் ஒழுக்க நெறிகளை சுட்டிக்காட்ட முயன்ற போது அதற்கு ஹிந்து மதம் என்று பெயரிட்டார்கள்.

இந்த மதத்தை முன்னெடுத்தவர்கள் தமிழர்கள். ஐவகை நிலங்களில் ஐந்து தெய்வங்களை வழிபட்டனர் தமிழர். இன்றைக்கு பஞ்ச பூதங்கள் என்று அழைப்பதை அன்றைக்கு தமிழர் ஐந்திர ஆற்றல்கள் என்று அழைத்தனர். ஆற்றலாக இருக்கும் போது அவற்றை இறைந்து கிடப்பதால் இறையென்றார்கள். ஐவகை நிலத் தன்மையோடு பொருத்தி வழிபாட்டு வடிவமாக்கப் பட்ட போது அவைகளை தொய்ந்து இருக்கிற தெய்வங்கள் என்ற வகையில் தெய்வம் என்றார்கள். 

நிலம், நீர், காற்று, தீ, விசும்பு என்கிற ஐந்திர ஆற்றல்களில் விசும்புக்குப் பொருந்திய மலையும் மலை சார்ந்த குறிஞ்சிக்கான தெய்வத்தை மட்டும் கடவுள் என்றார்கள். 

நிலம், நீர், காற்று, தீ ஆகியன- தான்தோன்றி ஆற்றல்கள். அவைகளுக்கு தான்தோன்றியான இயக்கம் உண்டு. ஆனால் விசும்பு தான்தோன்றி ஆற்றல் கிடையாது. நிலம், நீர், காற்று, தீ ஆகிய மற்ற நான்கு தான்தோன்றி ஆற்றல்களால் இயக்கம் பெற்று அவைகளை இயக்கும் வல்லமை பெறுகிறது. 

விசும்பு என்கிற வெளியில் தாம் நிலம், நீர், காற்று, தீ என்கிற நான்கு ஆற்றல்களும் இருக்கின்றன. அந்த நான்கு ஆற்றல்களும் அணுக்களின் திரட்சி என்பதால், அவைகளுக்கு உள்ளேயும் வெளி இருக்கும்; கடந்தும் அதாவது வெளியிலும் வெளி இருக்கும். இதனால் நிலம், நீர், காற்று, தீ ஆகிய தான்தோன்றி ஆற்றல்களுக்கு உள்ளேயும் கடந்து அமைகிற விசும்பு இயக்கமற்றதான போதும், அவைகளால் இயக்கம் பெற்று  அவைகளை இயக்கும் வல்லமை பெறுகிறது விசும்பு ஆற்றல். 

இதனாலேயே குறிஞ்சி நில தெய்வத்தை கடந்தும் உள்ளும் இருப்பது என்ற பொருளில் கடவுள் என்றார்கள். 

நியுட்டன் கண்டுபிடித்த மூன்றாவது இயக்க விதியானது- இயற்கையின் இயக்கமாக இருப்பதன் அடிப்படைக்கான காரணம் இதுதான்.

எந்த ஒரு இயக்கமும் அதற்குச் சமமான எதிர் இயக்கத்தைப் பெறும் என்பதுதான் நியுட்டனின் மூன்றாவது விதி. 

ஆக மற்ற மதங்களுக்கான வழிபாட்டு வடிவங்களை இறை யென்றொ, கடவுள் என்றோ சொல்லக் கூடாது. தெய்வம் என்றுதாம் சொல்ல வேண்டும். தமிழில் இறை என்று சொன்னால் நிலம், நீர், தீ, காற்று என்கிற நான்கு தான்தோன்றி ஆற்றல்கள்தாம். கடவுள் என்று சொன்னால் விசும்பு ஆற்றல் மட்டுந்தான். 

ஐந்து நில தெய்வ ஆற்றல் பொருந்திய- வீட்டைக் காத்த பெரியோர், ஊரை நாட்டைக் காத்த வீரர் ஆகியோரை, வீட்டு தெய்வம் என்றும் குல தெய்வம் என்றும் தமிழர் வழிபட்டனர். நமது திருமணங்களில் வீட்டு தெய்வ வழிபாடு என்கிற ஒரு சடங்கு உண்டு.

தமிழர் வணங்கிய அத்தனை தெய்வங்களுக்கும் வடிவம் நடுகல்தான். தனித்தனி உருவம் எல்லாம் கிடையாது. அந்த நடுகல்லும் தற்போது லிங்கம் என்று வழங்கப் பட்டு வருகிறது.

குறிஞ்சி நில தெய்வத்தை ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் தெய்வம் என்பதாக உருத்திரம் என்றும், 

நுமக்கு உள்ளேயும் நமக்கு வெளியேயும் அமைந்து நமது ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் ஆற்றலாக நமது பிள்ளைகள் அமைவதால் (தக்கார் தகவிலார் என்ப தவரவர் எச்சத்தார் காண்படும்- நாம் சரியானவர்களா இல்லையா என்பதை நமது பிள்ளைகளால் காண முடியும் என்பதுதான் அந்தக் குறளின் பொருள்.) குறிஞ்சி நில தெய்வத்தை சேயோன் (சேய் என்றால் குழந்தை) என்றும், பிள்ளையார் என்றும் வழங்கினர் தமிழர். 

இன்றைக்கு சேயோனின் அண்ணனாக பிள்ளையாரை விநாயகன் ஆக்கி விட்டோம். சேயோனின் தந்தையாக உருத்திரனை ஈஷ்வர் ஆக்கி விட்டோம். 

உருத்திரன் என்பதும் சேயோன் என்பதும் பிள்ளையார் என்பதும் வேறு வேறு அல்ல.

தான்தோன்றி இயக்கம் இல்லாத விண்-

நிலம், நீர், காற்று, தீ ஆகிய தான்தோன்றி ஆற்றல்களால் இயக்கம் பெற்ற விண்வெளி-

அவைகளை இயக்க வல்லமை பெற்ற விசும்பு (விசும்பி விசும்பி அழுதல், என்பதில் விசும்புதல் என்பது தடுக்க முடியாத இயக்கம் என்று பொருள் அழுதல் என்று பொருளல்ல)

இதுவெல்லாம் ஆரியர்களுக்கு புரியாமலே நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் பஞ்ச பூதங்கள் என்று சொல்லி வருகிறார்கள். இயக்கமில்லாத வெளி, இயக்கம் பெறுகிறது என்பதுவெல்லாம் அவர்களுக்குப் புரியாது. 

தமிழ் மன்னர்கள் பார்ப்பனியர்களை கோயில் நிருவாகப் பணியில் ஈடுபடுத்தினார்கள். உலகில் உள்ள ஐந்து மதங்கள் தங்களை கோயிலோடு இணைந்த குடிகளாக கொண்டாடுவதற்கும் தங்கள் மதத்தை வளர்ப்பதற்கும், தங்களை உயர்ந்த இனமாகக் காட்டிக் கொள்வதற்கும், தங்கள் இனத்திற்கான இலட்சியத்தை தொடர்ந்து பேணுவதற்கும் தத்தம் மதத்தை சார்ந்தவர்களை கொண்டு இயங்குகிறது. 

தமிழரோ தமது திருமணம், தமது புதுமனை புகுவிழா, தமது கோயில், தமது பிள்ளைகளுக்கு பெயர் சூட்டல், தமது நிருவனங்களுக்கு பெயர் சூட்டல் என்பனவற்றில் எல்லாம்: தாங்கள் கோயிலுக்கு வெளியில் இயங்குகிற குடிகளாக- மாற்றொரு இனத்திற்கு தனது இனமானத்தையும், தனது உழைப்பையும், தனது பொருளாதாரத்தையும் வழங்கி அந்த இனத்திற்கு தொழிலையும் வாழக்கையையும் வழங்கி வருகிறது. இன்ற நேற்றல்ல இரண்டாயிரம் ஆண்டுகளாக.

தமிழன், இந்த அரிய வாய்ப்பை: ஆரியப் பார்ப்பனர்களைத் தவிர்த்து உலகின் வேறு எந்த இனத்திற்கு வழங்கியிருந்தாலும் அந்த இனம் தமிழனை உலகில் உயர்ந்த இனமாக உயர்த்திக் காட்டியிருக்கும். தமிழை உலக மொழியாக கொண்டாட வழியேற்படுத்தியிருக்கும். 

ஆனால் ஆரியப் பார்ப்பனர்கள் வெண்ணெய் திரண்டு வரும் போது பானையை உடைத்தது போல கனிந்து வந்த தமிழீழத்தைச் சிதைத்தார்கள். பலர் சுப்பிரமணியசாமிகளாய் உலா வந்து கொண்டிருக்கிறார்கள்.

தமிழ் மன்னர்கள் கோயில்களை மட்டும் கட்டிக் கொடுக்க வில்லை, தமிழகத்தில் இருக்கிற அத்தனை கோயில்களுக்கும் சொத்துக்களையும் உருவாக்கித் தந்திருக்கிறார்கள்.

பாவணர், மறைமலைஅடிகள், கிஅபெ.விசுவநாதம், காசுப்பிள்ளை, பாவலேறு பெருஞ்சித்திரனார், இளங்குமரன் போன்றோர் கைகளில் தமிழக கோயில்களை மீட்டு ஒப்படைத்தால், தமிழகக் கோயில்களில் வரும் வருமானத்தில், தமிழகத்தில் டாஸ்மாக் இல்லாமல், சிறப்பான நிருவாகம் செய்ய முடியும். தமிழர்களும் கோயிலோடு இணைந்த குடிகளாக மொழியும் மண்ணும் சிறக்க வாழ முடியும். 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,109.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.