Show all

நெஞ்சு சளி மற்றும் இருமல் போக்க வீட்டிலேயே செய்யக்கூடிய சிறந்த இயற்கை மருந்து

குளிர் காலங்களில் பொதுவாக பெரும்பாலான குழந்தைகளுக்கு நெஞ்சு சளி மற்றும் இருமல் பெரிய தொல்லையாக இருப்பது அனைவரும் அறிந்ததே. ஏன் பெரியவர்களுக்கு கூட இது போன்ற பிரச்சனை இருக்கும். நெஞ்சு சளி மற்றும் இருமல் போக்க வீட்டிலேயே எளிய முறையில்  செய்யக்கூடிய சிறந்த இயற்கை மருந்து முறையை இந்த செய்தி தொகுப்பில் காணலாம். 

தேவையான பொருள்கள்:

  • கற்பூரவல்லி - 4 இலைகள் 
  • துளசி - 5 இலைகள்
  • வெற்றிலை - 1 (காம்புடன்)
  • இஞ்சி - ஒரு துண்டு 
  • மிளகு - ஒரு ஸ்பூன் 
  • சீரகம் - ஒரு ஸ்பூன் 
  • தண்ணீர் - 300 மில்லி லிட்டர் 

செய்யும் முறை:
தண்ணீரில் இவை அனைத்தையும் சேர்த்து சுட வைக்க வேண்டும். தண்ணீரின் அளவு பாதியாக வரும் வரை அனைத்தையும் கொதிக்க விட வேண்டும். பிறகு அனைத்தையும் வடிகட்டி நீரை மட்டுமே எடுத்து பயன்படுத்தலாம். பெரியவர்களுக்கு ஒரு வேலைக்கு 50 மில்லி லிட்டர் வரையும் குழந்தைகளுக்கு  ஒரு வேலைக்கு 5 மில்லி லிட்டர் வரையும் கொடுக்கலாம். இதன் காரம் அதிகமாக இருக்கும் எனவே குழந்தைகளுக்கு கொடுக்கும் போது சிறிது பனங்கற்கண்டு கலந்து கொடுக்கலாம். இந்த கசாயத்தை ஒரு முறை செய்தால் இரண்டு நாட்கள் வரை வைத்து பயன்படுத்தலாம்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.