Show all

கண்ணிற்கு கீழே உள்ள கருவளையம் மற்றும் உடம்பில் கருப்பு தழும்புகளை நீக்க

பச்சை பயிறு மாவு மற்றும் மஞ்சள் உடன் எலுமிச்சை பழ சாறை கலந்து முகத்தில் பூசி ஒரு அரை மணி நேரம் வைத்து முகத்தை கழுவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து ஒரு வாரம் செய்து வந்தால் கண்ணிற்கு கீழே உள்ள கருவளையம் மட்டும் அல்லாமல் முகமும் மிகப்பொலிவுடன் காட்சி அளிக்கும்.

அதேபோல் உடம்பின் மற்ற இடங்களில் உள்ள கருப்பு தழும்புகளை நீக்க பச்சை பயிறு மாவு மற்றும் மஞ்சள் உடன் எலுமிச்சை பழ சாறை கலந்து உடம்பில் தேய்த்து குளித்தால் விரைவில் அனைத்து கருப்பு தழும்புகளும் நீங்கும்.

குழந்தைகளும் மிகச்ச சிறப்பான பொலிவு பெற இதை குளிக்கும் போது உடம்பு முழுவதும் தேய்த்து குளிக்க வைக்கலாம். ஆனால் குழந்தைகளுக்கு எலுமிச்சை பழ சாறுக்கு பதிலாக தண்ணீரை பயன்படுத்துங்கள். ஏனெனில் எலுமிச்சை பழ சாறு குழந்தைகளுக்கு சற்று எரிச்சலை தரும். எனவே அதை தவிர்ப்பது நல்லது. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.