Show all

உலகில் பல குட்டி நாடுகள் போர்ப்பீதியில் உறைந்து கிடக்கும் போது, குட்டித்தீவான இலங்கை பயமேயில்லாமல் ஆடுகிறது! இடையில் சினா-இந்தியா

11,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: உக்ரைனின் கிரிமியா பகுதியை கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ரஷ்யா தன்னுடன் இணைத்ததில் இருந்து இரு நாடுகளுக்குமிடையே பதட்டமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில், கிரிமியா அருகே உக்ரைன் நாட்டைச் சேர்ந்த 3 கடற்படை கப்பல்களை ரஷ்யா நேற்று ஞாயிற்றுக் கிழமை கைப்பற்றியது. கிரிமியா அருகே உள்ள கெர்ச் ஜலசந்தியை உக்ரைன் கப்பல்கள் கடந்தபோது, தங்கள் பகுதியில் சட்டவிரோதமாக நுழைந்ததாக கூறி இந்த நடவடிக்கையை ரஷ்ய ராணுவம் எடுத்திருக்கிறது.  

ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகள் பகிர்ந்து கொள்ளும் கெர்ச் ஜலசந்தியானது, அஸோவ் கடலுக்கு செல்லும் ஒரே பாதை ஆகும். அந்த பகுதியில் ரஷ்யா தனது டேங்கர் கப்பலை நிறுத்தி உள்ளது. அத்துடன் ரஷ்ய போர் விமானங்களும் அந்த பகுதியில் பறக்கின்றன. உக்ரைன் கப்பல்களை ரஷ்யா கைப்பற்றியதால் அசோவ் கடற்பகுதியில் பதட்டம் அதிகரித்துள்ளது.

இந்தச் சூழ்நிலையில், உக்ரைனின் ரஷ்ய எல்லையில்  உள்ள குறிப்பிட்ட பிராந்தியங்களில் ராணுவத்திற்கு முழு அதிகாரம் வழங்கக்கூடிய ராணுவச் சட்டத்தை அமல்படுத்த உக்ரைன் அரசு முடிவு செய்தது. இதற்காக பாராளுமன்றத்தில் நேற்று மசோதா தாக்கல் செய்யப்பட்டது. விவாதத்திற்கு பிறகு மசோதா மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. மசோதாவை நிறைவேற்ற 226 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், மசோதாவிற்கு ஆதரவாக 276 உறுப்பினர்கள் வாக்களித்தனர். இதையடுத்து நாளை (புதன்கிழமை) காலை 9 மணி முதல் 30 நாட்களுக்கு ராணுவச் சட்டம் அமல்படுத்தப்பட உள்ளது.

தேசிய பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் முதலில் 60 நாட்களுக்கு ராணுவ சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான ஆணையில் அதிபர் பெட்ரோ போரோஷென்கோ கையெழுத்திட்டார். அதன்பின்னர், 30 நாட்களாக குறைத்தார்.

இது தொடர்பாக உக்ரைன் அதிபர் கூறுகையில், 'ராணுவச் சட்டம் அமல்படுத்தப்பட்டதால் போர் பிரகடனம் என்று பொருள் அல்ல.  உக்ரைன் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கை' என்றார். 

இப்படித்தான் ரஷ்யா மற்றும் அமெரிக்காவிற்கு பயந்து உலகில் பல குட்டி நாடுகள் போர்ப் பீதியலேயே இருக்கின்றன. ஆனால் இந்தியாவிற்கு அருகில் இருக்கிற குட்டித் தீவான இலங்கை: இந்தியா ஆட்சியாளர்களுக்கு இருக்கிற தமிழர் விரோதப் போக்கை பயன் படுத்திக் கொண்டு, தமிழீழத் தமிழர்களை கேடயமாக நிறுத்தி, சீனாவிற்கும், இந்தியாவிற்கும் பப்பு காட்டிக் கொண்டு பாராளுமன்றமேயில்லாமல், மைத்திரிபால சிறிசேனாவின் அடவடியிலும் கொஞ்சம் கூட அச்சமே இல்லாமல், ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கிறது.

  -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,69,984.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.