Show all

எம்.ஜி.ஆர்., சிவாஜி, எஸ்.எஸ்.ஆர். ஆன்மாக்கள், தன்னை இயக்குவதாக விஷால்.

நடிகர் சங்கத்துக்கான கட்டடம் கட்டப்படும் வரை ஓயமாட்டேன் என்று நடிகர் விஷால் தெரிவித்தார்.

மறைந்த நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரனின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், விஷால் பேசியது:

மூத்தக் கலைஞர்களுடன் இளம் கலைஞர்களுக்குத் தொடர்பில்லா சூழல் நிலவிவருகிறது. இந்த நிலை விரைவில் மாறும்.

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்குப் புதிய கட்டடம் கட்டும் வரை ஓயமாட்டேன். அந்தக் கட்டடத்தில் இதுவரை இல்லாத அளவில் புதிய வசதிகள் ஏற்படுத்தப்படும். அதேபோல், மூத்த கலைஞர்களின் நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.

நடிகர் சங்கம் என்றாலே எம்.ஜி.ஆர்., சிவாஜி, எஸ்.எஸ்.ஆர். என்ற மூன்று பேர்தான் நினைவுக்கு வருவர். அவர்களின் ஆன்மாக்கள்தான் என்னையும், நாசரையும், பொன்வண்ணனையும், கருணாஸ் உள்ளிட்டவர்களையும் இயக்குகிறது என்றார் விஷால்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.