Show all

பிறந்த பச்சிளங்குழந்தை மருத்துவர் உடையைப் பற்றிக் கொண்டு என்ன கேட்கிறது! இணையத்தில் தீயாகும் புகைப்படம்

21,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அப்போதுதான் அறுவைசிகிச்சையின் மூலம் குழந்தை வெளியே எடுக்கப்பட்டது. அந்த நொடியே அறுவைசிகிச்சை செய்த மருத்துவரின் ஆடையை கெட்டியாக இறுக்கி பிடித்து கொண்டது அந்த பச்சிளம் குழந்தை!

வியட்நாமில் பிகுஓங் சாவு இன்டர்நேஷனல் என்ற மருத்துவமனை உள்ளது. இங்கு பெண் ஒருவருக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தது. ஆனால் பிறந்தவுடன் தன்னை பிரசவம் பார்த்த மருத்துவரின் ஆடையை அந்த சிசு கெட்டியாக இறுகப் பிடித்துக்கொண்டது.

இதைப் பார்த்து அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சியும்  நெகிழ்ச்சியும் அடைந்தனர். குழந்தை நீண்ட நேரம் இப்படியே மருத்துவர் உடையை பிடித்து கொண்டிருப்பதை மருத்துவமனை நிர்வாகம் புகைப்படம் எடுத்து, அதை பதிவிட்டது. இந்தப் படம் இணையத்தில் தீயாகி வருகிறது.

இணைய ஆர்வலர்கள் ஒவ்வொருவரும் அவரவருக்குத் தோன்றும் கருத்துக்களை குழந்தை சொல்வதாக பதிவிட்டு, விருப்பங்கள் அள்ள, பகிர்வுகளை மேற்கொண்டு வருகிறார்கள். 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,082.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.