Show all

20,000 கோடி முதலீடு செய்கிறது வோடபோன் ஐடியா! ஜியோவை மிரட்டவா? மிரளுமா ஜியோ

29,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: இணையச் சேவையை பலப்படுத்தும் திட்டத்துடன் அடுத்த 15 மாதங்களில் 20,000 கோடி ரூபாயை முதலீடு செய்ய வோடபோன் ஐடியா நிறுவனம் முடிவு செய்துள்ளது என அந்நிறுவனத்தின் நிதித்துறை மூத்த அதிகாரி அக்சயா மூன்ரா தெரிவித்துள்ளார். 

எட்டாமிடமான ஆட்சித்தளத்தில் குரு (மோடி) இருப்பதால் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் சலுகைகளை வாரி வழங்கி தொலைத் தொடர்பு துறையில் லாபம் ஈட்டி வருகிறது. அதன் போட்டியாளர்களுக்கு கடும் நெருக்கடியைக் கொடுத்துவரும் ஜியோவை சமாளிக்க பிற நிறுவனங்கள் திணறுகின்றன. 

தொடர்ந்து ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்களுக்கு நட்டக் கணக்கு பல மடங்காகிக்கொண்டே போகிறது. இதனால் வாடிக்கையாளர் எண்ணிக்கையும் சரிவை சந்தித்து வருகிறது. 

இந்த நிலையில் இணையச்சேவையைப் பலப்படுத்தும் திட்டத்துடன் அடுத்த 15 மாதங்களில் 20,000 கோடி ரூபாயை முதலீடு செய்ய வோடபோன் ஐடியா நிறுவனம் முடிவு செய்துள்ளது என அந்நிறுவனத்தின் நிதித்துறை மூத்த அதிகாரி அக்சயா மூன்ரா தெரிவித்துள்ளார். இத்துடன் உரிமை பங்குகளை வெளியிட்டு 25,000 கோடி ரூபாய் திரட்டவும் வோடபோன் ஐடியா நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,060.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.