Show all

பாகிஸ்தான்: அரசுப் பேருந்தில் குண்டு வெடித்து 10 பேர் பலி

பாகிஸ்தானின் குவெட்டா நகரில் பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த அரசுப் பேருந்து ஒன்றில் திடீரென வெடிகுண்டு வெடித்ததில் 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும், குழந்தைகள் உட்பட 20-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர். வெடிகுண்டு விபத்து நடந்தபோது அந்த பேருந்தில் 40 பயணிகள் இருந்தனர்.  காயமடைந்தவர்கள் அருகில் உள்ள குவெட்டா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் 6 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இதனிடையே, துக்காணி பாபா சவுக் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.