Show all

சிக்கிய கார் திருடியிடம் விவரம் கேட்ட காவல்துறையினர் விழுந்து விழுந்து சிரித்தனர்! ஒரு கோடி மதிப்பிலான கார் திருட்டு.

அமெரிக்காவில் ஒரு கோடிக்கும் அதிக மதிப்புப் பெற்ற மின்சார காரைத் திருட முயன்ற பெண் காவல்துறையிடம் சிக்கிய சம்பவம் அங்குள்ள ஊடகங்களில் வெளியாகி பலரையும் வயிறு வலிக்கச் சிரிக்க வைத்துள்ளது.
 
27,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கார் வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே போவது போல கார் திருடர்களின் எண்ணிக்கையும் கூடிக் கொண்டுதான் செல்கிறது. 

புதுப்புது தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் தயாரிக்கப்பட்டாலும், அதை எளிதாக திருடப்படும் சம்பவங்களும் அங்காங்கே அரங்கேறி வருகின்றன. இதனால் பல்வேறு தொழில்நுட்ப வசதிகளுடன் கார்கள் தயாரிக்கப்படுவது மிகவும் தேவையாகிவிட்டது. 

தொழிலில் கொடிகட்டி பறப்பவராக இருந்தாதலும், குறிப்பிட்ட நிறுவனங்களின் கார்களின் மீது கைவைத்தால் எந்த திருடனும் சிக்கிக் கொள்வான். அப்படிப்பட்ட கார்களை தயாரிக்கும் நிறுவனம் தான் டெஸ்லா. இது மின்சார கார் தயாரிப்பில் உலகளவில் பிரபலமான நிறுவனமாக உள்ளது. 

அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இந்நிறுவனம், அதிநவீன வசதிகளுடன் மின்சார காரை தயாரித்து புதிய சாதனையை உருவாக்கியது. டெஸ்கா கார்களில் இருக்கும் பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் ஆடம்பர வசதிகள் வேறு எந்த மின்சார கார்களிலும் இதுவரை அமைக்கப்படவில்லை. 

அரிசோனா மாகாணத்தில் உள்ள பேசன் என்ற பகுதியில் இருக்கும் வணிகவளாகத்தில் டெஸ்லா மாடல் எஸ் 
மின்சார கார் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. கொஞ்ச நேரம் அங்கே நின்று காரை நோட்டம் விட்ட ஒருபெண் உடனடியாக திருடிக்கொண்டு புறப்பட்டுவிட்டார். 

காரை தொலைத்த உரிமையாளர் உடனே அரிசோனா காவல்துறையிடம் புகார் அளித்தார். உடனே காவல்துறையினர் திருடப்பட்ட காரை பின்தொடர்ந்து சென்றனர். டெஸ்லா மாடல் எஸ் காரை தொழில்நுட்ப உதவியுடன் நிறுத்துவதற்கு காவல்துறையினர் முடிவுச் செய்துள்ளனர். 

ஆனால் கார் நின்றுவிட்டது. பின்தொடர்ந்து வந்த காவல்துறையினர் காரை மீட்டனர். திருடியையும் சுற்றி வளைத்தனர். திருடியை கைது செய்தனர். அவரை பிடித்து விசாரித்ததில் தனது பெயர் கேத்தி செயின் என தெரிவித்தார். 

தொடர்ந்து, கார் எப்படி திடீரென நின்றது என்று குறித்து காவல்துறையினர் ஆராய்ந்தனர். அப்போது காரில் மின்கலனில் சக்தி தீர்ந்துவிட்டது தெரியவந்தது. இதனால் திருடி கேத்தி செயின் சிக்கிக்கொண்டதை நினைத்து அரிசோனோ காவல்துறையினர் விழுந்து விழுந்து சிரித்தனர். 

எனினும், தொழில்நுட்பத்தில் சிறந்த வகையில் விளங்கும் டெஸ்லா எஸ் காரை கேத்தி செயின் எப்படி திருடினார் என்பதற்கான பதில் இன்னும் தெரியவில்லை. உரிமையாளரின் அஜாக்கிரதையை பயன்படுத்தி அந்த கார் திருடப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர். 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,242.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.