Show all

அமைதிப் பேரணி மீது தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதல்.

துருக்கி தலைநகர் அன்காராவில் இன்று நடைபெற்ற அமைதிப் பேரணி மீது தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் இருபதுக்கும் அதிகமானோர் பலியானார்கள்.

அங்கு ஆட்சியாளர்களுக்கும் குர்திஷ் படையினருக்கும் இடையில் நடைபெற்றுவரும் உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் இன்று காலை தலைநகர் அன்காராவில் அமைதி பேரணி நடத்தப்பட்டது. அப்போது பேரணியை வழிமறித்த சிலர், கூட்டத்தினர் மீது வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.

இதில் இருபதுக்கும் அதிகமானவர்கள் உடல் சிதறி உயிரிழந்தனர். காயமடைந்த பலர் உடலுறுப்புகள் சிதைந்த நிலையில் உயிருக்கு போராடி வரும் காட்சிகளை உள்நாட்டு ஊடகங்கள் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றன. இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.