சூரிய மண்டலத்துக்கு அப்பால் 1,284 புதிய கோள்கள் இருப்பதை நாசா
விஞ்ஞானிகள் கண்டுப்பிடித்து சாதனை படைத்துள்ளனர். சூரிய மண்டலத்தைப் போலவே, பல சூரிய மண்டலங்கள் உள்ளன. விண்வெளியில்
உள்ள பல சூரியன்களை அவற்றுக்கான கோள்கள்; சுற்றி வருகின்றன. அவற்றை நாசா அனுப்பிய கெப்ளர்
கண்டுபிடித்துள்ளது. இந்நிலையில், சூரிய மண்டலத்துக்கு அப்பால் 1,284 புதிய கோள்கள்
இருப்பதை இதுவரை கெப்ளர் தொலைநோக்கி கண்டுபிடித்துள்ளது என்று நாசா தெரிவித்துள்ளது.
அவற்றில் 9 கோள்கள் தங்கள் சூரியனில் இருந்து பூமியைப் போலவே சரியான தூரத்தில் சுற்றி
வருகின்றன. அதனால் அங்கு சரியான தட்பவெப்ப நிலை, தண்ணீர் இருப்பதான வாய்ப்புகள்
இருப்பதால் உயிர்கள் வாழக்கூடிய சூழல் இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நாசாவின் தலைமை விஞ்ஞானி எலன் ஸ்டாபேன் கூறியதாவது:- இந்த கண்டுபிடிப்பு, நமது பூமியைப் போலவே விண்வெளியில் கோள்கள்
இருக்கும் என்ற நம்பிக்கையை அதிகரித்துள்ளது. கெப்ளர் தொலைநோக்கியின் புதிய கோள்களின்
கண்டுபிடிப்புகள் குறித்து கடந்த ஜூலை 2015-ம் ஆண்டு பட்டியல் தயாரிக்கப்பட்டது. அப்போது மொத்தம் 4,302 கோள்கள் இருப்பது தெரியவந்தது. அவற்றில்
1,284 கோள்கள் தாம் உண்மையில் பெரியதாக இருப்பது உறுதி செய்யப்பட்டது. இவற்றில்
550 கோள்கள் பூமியை போலவே அளவு மற்றும் பாறைகள் நிறைந்தவையாக உள்ளன என்று தெரிவித்தார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.