Show all

மல்லையா அசல் திருப்ப சம்மதம்! வங்கிகள்- மல்லையா இழுபறி: வட்டி, அபராத வட்டி, மற்ற செலவுகள் குறித்தானதா?

19,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: நூறு விழுக்காடு அசல்  தொகையையும் தந்து விடுகிறேன், தயவு செய்து வாங்கிக் கொள்ளுங்கள்; என வங்கிகளுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக தெரிவித்து வருவதாக மல்லையா குறிப்பிடுகிறார்.

லண்டன் அறங்கூற்று மன்றத்தில், தீர்ப்பு வெளிவர 5 நாட்களே உள்ள நிலையில், வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய தொகையை செலுத்தி விடுவதாக விஜய் மல்லையா கூறியிருப்பதாக செய்தி வெளியிட்டதை விமர்சித்து, கீச்சு பதிவிட்டுள்ள விஜய் மல்லையா, 'வழக்கமான முட்டாள்தனம் இது, 2016 முதலே நான் பணத்தை திருப்பி செலுத்தி விடுவதாக கூறி வருகிறேன்' என தெரிவித்துள்ளார்.

இந்திய வங்கிகள் பலவற்றிலும் 9 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேலாகக் கடன் வாங்கி விட்டு திருப்பிச் செலுத்தாமல், மல்லையா, லண்டனில் இருக்கிறார். இங்கிலாந்து நாட்டில் தஞ்சம் அடைந்துள்ள அவரை இந்தியாவுக்கு கொண்டு வர நடுவண் அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது. இது தொடர்பான வங்கிகளின் வழக்கு விசாரணை லண்டன் நீதிமன்றத்தில்  நடைபெற்று வருகிறது. என்பது செய்தி என்ற நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக அசல் தொகையை செலுத்த சம்மதம் என மல்லையா தெரிவிப்பதாகவும், வங்கிகள் மறுப்பதாகவும் சொன்னால், வங்கிகள் நிர்பந்;;;;;;;;;;;;திப்பது வட்டி, அபராத வட்டி மற்றும் கடன் வசூல் முயற்சியின் பாற்பட்ட செலவுத் தொகையா! என்ற கேள்வி எழுகிறது.

விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்புவது தொடர்பான வழக்கில் இறுதி தீர்ப்பு வரும் திங்கட் கிழமை அளிக்கப்படும் என தெரிவிக்கப் பட்டுள்ளது. 

அரசியல்வாதிகளும், ஊடகங்களும், பொதுத்துறை வங்கிகளின் பணத்தை வேண்டும் என்றே திரும்ப செலுத்தாமல் ஓடி விட்டதாக கூக்குரல்  இடுகின்றனர். இவை அனைத்தும் தவறானவை. கர்நாடக அறங்கூற்றுமன்றத்தில் நான் பணத்தை செலுத்தி விடுவதாக கூறியதற்கு ஏன், யாரும் அதிகம் பேசவில்லை. 

விமான எரிபொருள் விலை அதிகரித்ததால், விமானங்கள் நிதி நெருக்கடியில் சிக்கின. இழப்புகள் அதிகரித்ததால், வங்கி பணம் அங்கு சென்றது. அசல் தொகை 100 விழுக்காட்டையும் தந்து விடுகிறேன். தயது செய்து அவற்றை பெற்றுக் கொள்ளுங்கள். இவை மறுக்கப்படுமாயின் ஏன்? எனவும் கேள்வி எழுப்பி அடுத்தடுத்து கீச்சுவில் விஜய் மல்லையா பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்;டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,69,992.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.