Show all

தமிழக மீனவர்கள் காவல் நீட்டிப்பு: கைது செய்த கடற்படையினர் ஆவணங்களைச் சமர்ப்பிக்கவில்லையாம்

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் 11 பேருக்கு நவ.20ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ராமேசுவரம் பகுதியிலிருந்து அக்டோபர் 26ஆம் தேதி குவிட்சன், பொன்னுச்சாமி ஆகியோர்களின் படகுகளில் 11 மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றிருந்தனர். கச்சத்தீவு அருகே மீன்பிடித்த இவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்களை நவ. 6ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில், காவல் முடிந்து 11 பேரையும் போலீஸார் வௌ;ளிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது மீனவர்கள் மீதான வழக்கு குறித்த ஆவணங்களை இலங்கை கடற்படையினர் சமர்ப்பிக்கவில்லை எனக் கூறி, அவர்களின்

நீதிமன்றக்காவலை நவ. 20ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அலெக்ஸ்ராஜா உத்தரவிட்டார்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.