Show all

வளர்த்தவர் வருவார் என்று நடுத்தெருவில் காத்திருக்கும் நாய்! சீன வெய்போ சமூக வலைதளத்தில் அள்ளும் விருப்பங்கள்

29,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சீனாவில் 80 நாட்களாக தன்னை வளர்த்து வருபவருக்காக தெருவில் காத்திருந்த விசுவாசமிக்க நாய் ஒன்று வலைதள சமூகத்தினரை நெகிழ வைத்துள்ளது.

அந்த நாயை வளர்த்து வந்தவர் மரணமடைந்து எண்பது நாட்கள் கடந்து விட்டன. அன்றிலிருந்து அந்த நாய் அன்றாடம் நடுச்சாலையில் வந்து காத்து கிடக்கிறது.
சிலர் அந்த நாய்க்கு உதவ முன்வந்தனர். ஆனால் அந்த நாய் ஓடி விடுகிறது என கார் ஓட்டுநர் ஒருவர் தெரிவித்தார். ஓட்டுநர்கள் அந்த சின்ன நாய்க்கு உணவு வழங்க முயற்சிகின்றனர் ஆனால் அது ஓடி விடுகிறது.
இந்த நாய் தெருவில் தன்னை வளர்த்தவருக்காக காத்திருக்கும் காணொளி; சமூக வலைதளமான சின வெய்போவில் பதிவிடப்பட்டுள்ளது. அதில் நாயின் விசுவாசத்தை கண்டு அனைவரும் நெகிழ்ந்து வருகின்றனர். 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,972.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.