02,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஹரியானா மாநிலத்தை சேர்ந்த மனுஷி சில்லார் இந்த ஆண்டிற்கான உலக அழகி பட்டத்தை வென்றுள்ளார். 108 நாடுகளைச் சேர்ந்த பெண்கள் பங்கேற்ற உலக அழகி போட்டி தெற்கு சீனாவின் சான்யா நகரில் நடைபெற்றது. இதில் இன்று வெற்றி பெற்றவர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டது. அதில் இந்தியாவைச் சேர்ந்த 20 அகவை மனுஷி சில்லார் இந்த ஆண்டிற்கான உலக அழகி பட்டத்தை பெற்றதையடுத்து அவருக்கு மகுடம் சூட்டப்பட்டது. மருத்துவ மாணவியான மனுஷி ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர். இவரின் பெற்றோர் மருத்துவர்கள். மனுஷியின் தந்தை டாக்டர் மித்ரா பாசு சில்லார் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் விஞ்ஞானியாக உள்ளார். இவரின் தாய் டாக்டர் நீலம் சில்லார் நரம்பியல் வேதியியல் துறையின் பேராசிரியர். மருத்துவ மாணவி சோனிப்பேட்டையில் பகத் பூல் சிங் பெண்கள் அரசு மருத்துவக் கல்லூரியில் மனுஷி மருத்துவம் படித்து வருகிறார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,610
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.