02,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழர் எவ்வாறு செவ்வாய் என்று பெயர் சூட்டியிருப்பர் செவ்வாய் கோளுக்கு! என்று தமிழராகிய நாம் அறிந்து கொள்ள முயலாமலே போனோம். ஆரியர் நம்மோடு கலந்த பிறகு, புராண இதிகாச புளுகு மூட்டைகளில் அமிழ்ந்து விட்டோம். தற்போது ஆரியம், மார்க்சியம், ஐரோப்பியம், அராபியம், என அயல் வாழ்மானங்களில் நமக்கான அடையாளங்கள் எதையும் சிந்திக்க மனமில்லாமல், வெறுமனே பிழைப்பு நடத்திக்; கொண்டிருக்கிறோம். பதினைந்து ஆண்டுகளாக அந்த செவ்வாய் கோளை ஆராய்ந்து வந்த ஆப்பர்சுனிட்டி ரோவருக்கு, உடல் நலமில்லாமல் போய் விட்டது. அத்தனை மைல்களுக்கு அப்பால் அனுப்பப் பட்ட ஆப்பர்சுனிட்டி ரோவருக்கு நோய் தீர்க்க முடியவில்லை நாசாவல். வெறும் 90 நாட்கள் மட்டுமே ஆயுட்காலத்தைக் கொண்ட ஆப்பர்ச்சுனிட்டி ரோவர் 2003 ஜூன் மாதம் அனுப்பப்பட்டு, 2004 ஜனவரி மாதம் செவ்வாய் கிரகத்தில் இறங்கியது. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் அந்த ரோவரானது 15 ஆண்டுகளுக்கும் மேல் செயல் புரிந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. சிவப்பு கோளான செவ்வாயை, 10 கோடி மைல்களுக்கு அப்பால் பூமியில் இருந்து அன்றாடம் விஞ்ஞானிகள் அறிகின்றனர். கடந்த 15 ஆண்டுகளாக, செவ்வாய் கோள் மாதிரிகளில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்ட ரோவர் செவ்வாய் கோள் தொடர்பான பல அறிவியல் உண்மைகளைக் கண்டறிந்து பூமிக்கு அனுப்பி உள்ளது. செவ்வாயில் தண்ணீர் இருக்கிறதா என்பதை பார்க்கவே இந்த ரோவரை அனுப்பினார்கள். இதன் ஆயுட்காலம் அப்போது 90 நாட்கள் என்று கணிக்கப்பட்டது. அதேபோல் 90 நாட்களில், செவ்வாயில் ஒரு காலத்தில் தண்ணீர் இருந்ததற்கான ஆதாரங்களை எல்லாம் திரட்டி, நாசாவிற்கு அந்த ரோவர் அனுப்பியது. பயங்கர புழுதிபுயல் காரணமாக முதன்மையான கணினியில் கோளாறு ஏற்பட்டது. இதனால் ஆப்பர்சுனிட்டி ரோவர் தனது ஆராய்ச்சிகளை முழுவதுமாக நிறுத்தியது. கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் அமெரிக்க விண்வெளி நிறுவனம் தொடர்பை இழந்ததில் இருந்து ரோபோ காணாமல் போனதாக நாசா அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. விண்வெளி ஆராய்ச்சியின் வரலாற்றில் மிகவும் பயனுள்ள செயல்திட்டங்களில் ஒன்றாக இருந்தது ஆப்பர்சுனிட்டி ரோவர். அதன் மின்கலன்களை மின்னேற்றம் செய்ய முடியவில்லை, பூமியில் இருந்து அனுப்பப்பட்ட நூற்றுக்கணக்கான செய்திகளுக்கு சில மாதங்களாக அதனிடம் இருந்து பதில் எதுவும் இல்லை. இதனால் இந்த ரோவர் திட்டம் முடிவடைந்ததாக நாசாவின் அறிவியல் மிஷன் இயக்குநரகத்தின் இணை நிர்வாகி தாம்ஸ்சுர்புஜன் அறிவித்து உள்ளார். கலிபோர்னியா, பசடேனாவில் உள்ள தலைமையகத்தில் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இந்த திட்டத்தில் ஈடுபட்டு இருந்த ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பொறியியலாளர்கள் வேதனை அடைந்து உள்ளனர். அரிசோனா மாநில பல்கலைக்கழக செவ்வாய் கோள் ஆராய்ச்சி இயக்குனர் தியானா ஹாரிசன் தனது கீச்சுவில், அது அமைதியானது, இது கண்ணீர் நிறைந்தது. அது எங்களுடன் பின்னி பிணைந்து இருந்தது. அது நினைவுகளையும் சிரிப்பையும் எங்களுடன் பகிர்ந்து கொண்டது என்று அவர் கூறி உள்ளார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,063.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.