Show all

சவுதி கூட்டுப்படைகள் குண்டுவீசி தாக்கியதில் 2 படகுகளில் இருந்த 20 இந்தியர்கள் பலி

ஏமன் நாட்டின் ஹொடிடா துறைமுகத்தில் சவுதி கூட்டுப்படைகள் குண்டுவீசி தாக்கியதில் 2 படகுகளில் இருந்த 20 இந்தியர்கள் பலியானதாக நேற்று தகவல்கள் வெளியாகின. எண்ணெய் கடத்தல்காரர்கள் மீதான தாக்குதலின் போது இந்த சம்பவம் நடந்தது. இந்தியர்கள் பலியான தகவலை இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் மறுத்துள்ளது.

இது குறித்து வெளியுறவு துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் விகாஸ் சுவருப்  படகுகளில் சென்ற 20 இந்தியர்களில் 13 பேர் உயிருடன் உள்ளனர். 7 பேர் மட்டுமே மாயமாகி உள்ளனர். யாரும் சாகவில்லை. உயிருடன் உள்ளவர்கள் யார்? மற்றும் மாயமான இந்தியர்கள் யார்? என்பன பற்றிய தகவல் உடனடியாக கிடைக்கவில்லை.

இந்திய தூதரக அதிகாரிகள் அந்நாட்டு உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பு கொண்டு தகவல்களை பெற்று வருகின்றனர். மேலும் படகு உரிமையாளரிடம் விசாரித்து முழு விவரம் பெறப்படும்.இவ்வாறு அவர் கூறியுளளார;.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.