Show all

ராஜபக்சே விலகல்! இலங்கை அரசியல் குழப்பத்திற்கு முற்றுப் புள்ளியா? இல்லை அதைக் காற்புள்ளியாக்கி மீண்டும் குழப்புவாரா சிறிசேனா!

29,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: கடந்த ஐம்பது நாட்களாக நீடித்து வந்த இலங்கையின் அரசியல் குழப்பத்திற்கு காரணமாக அமைந்த, பொம்மை தலைமை அமைச்சர் ராஜபக்;;சே பதவி விலகினார்.

இலங்கை தலைமை அமைச்சர் பதவியில் இருந்து ராஜபக்சே விலக முடிவு செய்து இருப்பதாக அவரது மகன் நமல் ராஜபக்சே நேற்று குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில், இலங்கை தலைமை அமைச்சர் பதவியில் இருந்து இன்று மகிந்த ராஜபக்சே விலகியுள்ளார். தனது விலகல் கடிதத்தை அதிபர் சிறிசேனாவுக்கு ராஜபக்சே அனுப்பி வைத்துள்ளார்.

இலங்கை அரசியல் குழப்பத்திற்கு ராஜபக்சே வைத்திருப்பது முற்றுப் புள்ளியா? இல்லை அதைக் காற்புள்ளியாக்கி மீண்டும் குழப்புவாரா சிறிசேனா! பொறுத்திருந்து பார்ப்போம்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,002.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.