Show all

நியாயத்தளத்தில் ஈரான் மக்கள்! உக்ரைன் விமானம் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்டதற்கு பொறுப்பேற்று, இராணுவ அமைச்சர் பதவி விலக போராட்டம்.

உக்ரைன் விமானம் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்டதற்கு பொறுப்பேற்று, இராணுவ அமைச்சர் பதவி விலகக் கோரி ஈரான் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

29,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஒரு பக்கம் அமெரிக்காவை பலிவேண்டிய கட்டாயம் என்றால், மற்றொரு பக்கம் ஈரான் மக்கள் நியாயங் கேட்டு போராட்டம் நடத்தி வருவது ஈரான் அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. 

ஈரான் நாட்டில், உக்ரைன் விமானம் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்டதாக அந்த நாடு அறிவித்த பின்னர், மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். விமான விபத்தில் ஈரானியர்கள் உள்பட 176 பேர் உயிரிழந்த நிலையில், இந்த சம்பவத்துக்கு பொறுப்பேற்று  புதிய ராணுவ தளபதி இஸ்மெயில் கானி பதவி விலக வேண்டும் என மக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,396.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.