Show all

ஒன்றரை வயது குழந்தை நஞ்சுப் பாம்பை கடித்துக் கொன்றுள்ள விந்தை

பிரேசில் நாட்டில் ஒன்றரை வயது குழந்தை நஞ்சுப் பாம்பை கடித்துக் கொன்றுள்ள விந்தையான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

தெற்கு பிரேசிலைச் சேர்ந்த ஜெயின் ஃபெரேறிய மற்றும் லூசியர் டிசோஸா தம்பதியின் ஒன்றரை வயது குழந்தை லோரென்சோ.

இச்சிறுவன், பிரேசில், அர்ஜென்டீனா மற்றும் பராகுவே உள்ளிட்ட நாடுகளில் வசிக்கின்ற ஜராரக்கா எனும் நஞ்சுப் பாம்பை கடித்துக் கொன்றுள்ளான்.

பொதுவாக, இத்தகைய பாம்புகள் கடித்து, அதற்கு மருத்துவ சிகிச்சை செய்யாமல் இருந்தால் ரத்த கசிவு, சிறுநீரக கோளாறு உள்ளிட்ட அபாயகரமான அறிகுறிகளுடன் உடல் நலக் கோளறு ஏற்படுவது வழக்கம்.

ஆனால், இச்சிறுவன் அந்தப் பாம்பை கடித்துக் கொன்று அதிர்ஷ்டவசமாக நல்ல முறையில் இருப்பது அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கிறது.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.