Show all

உயர் நீதிமன்றம், சசிபெருமாள் மகனின் கோரிக்கையை நிராகரித்தது

சசிபெருமாள் மரணம் தொடர்பாக நீதி விசாரணை நடத்த வேண்டும் என கோரி, அவரது மகன் விவேக் உயர் நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார். அவரது கோரிக்கையைச் சென்னை உயர் நீதிமன்றம் இன்று நிராகரித்தது.

சசிபெருமாள் மரணம் தொடர்பாக நீதி விசாரணை நடத்த வேண்டும் என கோரி, அவரது மகன் விவேக் உயர்நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார்.

மனு மீதான விசாரணை நடத்திய உயர் நீதிமன்றம், சசி பெருமாள் மகனின் கோரிக்கையை நிராகரித்தது. மேலும், மூன்று வாரத்துக்குள் விசாரணையை முடித்து, சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். காவல்துறை கண்காணிப்பாளர், டிஐஜி மேற்பார்வையில் விசாரணையை நடத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

மதுவிலக்கு போராளி சசிபெருமாள், மார்த்தாண்டம் அருகே கடந்த ஜூலை 31-ம் தேதி நடைபெற்ற மதுவிலக்கு போராட்டத்தின் போது செல்பேசி டவரில் இருந்து விழுந்து உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.