Show all

2வது அதிபருக்கான தேர்வைத் தொடங்குவார்கள் மக்கள்; எச்சரிக்கை! 2 தலைமை அமைச்சர்களைத் தொடர்ந்து, 2 பேரவைத்தலைவர்கள்

20,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சிறிசேனா பாராளுமன்றம் கூடும் நாளை அறிவித்த அதே வேளையில், ஒரு குழப்ப அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது இலங்கை அரசியலில் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மக்கள் மகிமை என்ற அரசியல் கூட்டத்தில், இலங்கை அதிபர் மைத்ரிபால சிறி சேனாவும், மகிந்த ராஜபக்சேவும் ஒரே மேடையில் தோன்றினர். மற்றொருபக்கம் இலங்கை நாடாளுமன்ற பேரவைத் தலைவராக தினேஷ் குணவர்த்தனேவை முன்மொழிந்து அழைத்து வந்துள்ளார்கள். 

இலங்கையில் இரு தலைமை அமைச்சர்கள் - இரு பேரவைத் தலைவர்கள் என உச்சகட்ட குழப்பத்திற்கு வித்திட்டுள்ள சிறிசேனாவிற்கு மாற்றாக இரண்டாவது ஒரு அதிபரை தேடத் தொடங்குவார்கள் மக்கள் என்பதை சிறிசேனா அறிந்து கொள்ள வேண்டும்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,963.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.