Show all

விடுதலை போராட்ட வீரர்களின் தாக்குதல் என்று செய்தி வெளியிடும் பாகிஸ்தான் ஊடகங்கள்! புல்வாமா தற்கொலைபடை தாக்குதலை

03,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நடுவண் ஆயுதக் காவல் படை வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த ஜய்ஸ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பு ஏற்றுள்ளது. இதற்காக இந்தியா சார்பில் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று நடுவண் அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், சர்வதேச ஊடகங்கள் இந்திய வீரர்கள் மீதான தீவிரவாதத் தற்கொலைப் படைத் தாக்குதல் குறித்து கண்டித்து செய்திகள் வெளியிட்டு வருகின்றன.

பாகிஸ்தானைச் சேர்ந்த 'தி நேஷன்' செய்தித்தாள் தீவிரவாதிகளை விடுதலைப் போராட்ட வீரர்கள் எனக் குறிப்பிட்டுள்ளது. மேலும், இந்தியா இந்த விடுதலைப் போராட்டத்துக்கு தீவிரவாதச் சாயல் பூசுவதாகவும் அந்த இதழ் குறிப்பிட்டுள்ளது.

மேலும், இதர பாகிஸ்தான் இதழ்களும் காஷ்மீர் மாநிலத்தை இந்திய ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் என்றே குறிப்பிட்டு செய்திகள் வெளியிட்டுள்ளன.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,064.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.