Show all

பேருந்து சாளர வழியாக பேருந்தில் இடம் பிடிக்க போடப்பட்ட துப்பாக்கி! இணையத்தில் இன்றையத் தலைப்பாக முதன்மை பெறும் செய்தி!

18,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நீலகிரி மாவட்டம் குன்னூரில் தீபாவளி பொருட்கள் வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இதனால் துணிக்கடை, நகைக்கடைகளில் கூட்டம் அதிகமாக உள்ளது.

இதனால் குன்னூர் சுற்றியுள்ள கிராமப்பகுதிகளில் இருந்து குன்னூர் வரும் பேருந்துகளில் கூட்ட நெரிசல் அதிகமாக உள்ளது. குறிப்பாக மூப்பர்காடு, கொலக்கம்பை, முள்ளிகூர் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதல் மாலை வரை பேருந்துகளில் இடம் பிடிக்க பயணிகள் முண்டியடித்து வருகிறார்கள். 

சம்பவத்தன்று மாலை முள்ளிகூர் செல்லும் பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்தது. பயணிகள் துண்டு, கைப்பை உள்ளிட்டவைகளை போட்டு இருக்கை பிடித்தனர். அப்போது அதே பேருந்தில் பயணம் செய்ய 2 காவலர்கள் வந்தனர். அதில் ஒருவர் பேருந்து சாளர வழியாக தனது துப்பாக்கியை இருக்கையில் போட்டு இடம் பிடித்தார்.

இதைப்பார்த்த சக பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து பயணிகள் கூறும்போது, பேருந்துகளில் இருக்கை பிடிக்க துப்பாக்கியை போடும்போது பயணிகள் அச்சம் அடைந்தனர். சமூக விரோதிகள் துப்பாக்கியை எடுத்துச் சென்றிருந்தால் விபரீதமாகி இருக்கும். காவலர்கள் இது போன்ற அநாகரீகச் செயலில் ஈடுபடுவது அபத்தமானது என்று வருந்தினர்.

காவலர் பேருந்தில் இடம் பிடிக்க துப்பாக்கி போட்ட செய்தி இணையத்தில் இன்றையத் தலைப்பாக முதன்மை பெறுகிறது. 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,961.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.