Show all

பழந்தமிழர் நாகரீகத்தோடு தொடர்புடைய அமெரிக்க மயன் பழங்குடிகளின் 347கி.மீ நீர்வழிக்குகை கண்டுபிடிப்பு

06,தை,தமிழ்தொடர்ஆண்டு-5119: உலகின் மிகப்பெரிய நீர்வழிக்குகை மெக்சிகோவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நீருக்கடியில் ஆராய்ச்சி செய்யும் தொல்பொருள் ஆய்வாளர்கள் இதனைக் கண்டுபிடித்துள்ளனர். தி கிரேட் மாயா அக்குபெர் குழுவினர் மெக்சிகோவின் யூகாடன் பெனின்சுலாவில் நீருக்கடியில் இருக்கும் மர்மத்தை கண்டறியும் ஆய்வில் இறங்கினர். ஓராண்டு ஆய்வுக்குப் பின்னர் நீருக்கடியில் சேக் அக்டன் மற்றும் துலுமில் உள்ள டாஸ் ஓஜோஸ் என்ற குகைகள் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். இந்த இரண்டு குகைகளும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவையாக கண்டறியப்பட்டுள்ளன. இந்த நீர்வழிக்குகை சுமார் 347 கி.மீ தூரம் வரை காணப்படுகிறது. இது தான் உலகிலேயே மிகப்பெரிய நீர்வழிக்குகை என்று ஆராய்சியாளர்கள் கருதுகின்றனர்.

தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் நீண்ட கால ஆராய்சிகளுக்கு பிறகு மாயன் பழங்குடியினர் மக்கள் பயன்படுத்தியதாக கூறப்படும் மிகப்பெரிய நீர்வழிக்குகை இது என்று கருதப்படுகிறது. இந்த பகுதியில் மாயன் பழங்குடிமக்கள் வாழ்ந்ததை உறுதி செய்யும் வகையில் சிதிலமடைந்த பாண்டங்கள் மற்றும் எலும்புகள் குகைக்கடியில் கண்டறியப்பட்டுள்ளன.

இந்தக் கண்டுபிடிப்பு மாயன் பழங்குடிகள் வாழ்ந்த இடம், சடங்குகள், குடியேற்றங்கள் பற்றி தெளிவாக நாம் புரிந்துகொள்ள உதவுகிறது என தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஆண்டா கூறியுள்ளார்.

அடுத்தகட்டமாக சேன் ஆக்டன் குகையில் உள்ள நீரின் தரத்தை ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் பகுதியில் பல்லுயிர் பெருக்கத்திற்;கான வாய்ப்பு எந்த அளவில் இருக்கிறது என்பதை கண்டறிவதற்காக இந்த சோதனை நடத்தப்பட உள்ளது. நீர்வழிக்குகை கண்டுபிடிப்பு திட்ட இயக்குனர் ராபர்ட் இந்த கண்டுபிடிப்பிற்காக சுமார் 20 ஆண்டுகளுக்கு மேல் செலவு செய்துள்ளார். கடைசியில் கண்டுபிடிப்பு சாத்தியமாகிவிட்டதாகவும், இனி இதனை பாதுகாப்பதே அனைவரின் கடமை என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆரியர் பயந்து அஞ்சிய ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ்க் கட்டிடப் பொறியாளன் மயன் என்கிற வரலாறு இங்கே பொருத்திப் பார்க்கத் தக்கது.

அமெரிக்காவில் பழங்குடிமக்களின் மாயன் நாட்காட்டியோடு தமிழ்த் தொடராண்டுக்கு இருக்கிற பொருத்தம் ஆராயத் தக்கது.

‘தென் அமெரிக்காவின் சோழர்கள் என்ற மீ.மனோகரன் அவர்கள் வரலாற்றாராய்ச்சி நூல் மூலம் இன்கா மன்னர்களும் சோழர்களும் ஒரே இனத்தவரே என்று நிறுவிய முயற்சி 42 ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கிறது.

இந்திய அரசு ஆளுமைக்கு தமிழர் முயலாத வரை பழங்கால வரலாற்றின் பல மர்ம முடிச்சுகள் அவிழாமலே போகும். இந்திய அரசு ஆளுமை ஆரிய இனத்தின் கையில் இருக்கும் வரை இராமயனம் மகாபாரதத்தை கடந்து எந்த ஆய்வுக்கும் வழி ஏற்படப் போவதில்லை. உலகத்தின் முதல் மாந்தன் தமிழனே என்பதை தமிழன் தலை நிமிர்ந்தால் நிறுவி விடுவான் என்பதை ஆரிய அரசியல் கட்சிகள் தெளிவாக உணர்ந்திருக்கிறார்கள். அதன் பொருட்டே ஈழத்தில் எழுந்த தமிழனைக் கூட, அழித்;;;தொழக்கும் முயற்சியில் இந்தியாவின் நிரந்தர எதிரி சீனாவோடு கூட, ஈழத் தமிழர் ஒழிப்புப் போரில் இந்தியாவை ஆளும் ஆரியக் கட்சிகள் கை கோர்த்தன.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,672

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.